இது நரேந்திரர் ஆளும் தேசம்ஜெய்ஹிந்த். வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்…சரியாகப் பார்க்க முடியாமல் கண்ணீர் மறைத்துவிட்டது…1988 சியோல் ஒலிம்பிக்கிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறேன்… எத்தனையோ ஏமாற்றங்கள்…சில லியாண்டர் பயஸ் , கர்ணம் மல்லேஸ்வரி , அபினவ் பிந்த்ரா , ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் , சாய்னா நெஹ்வால் , பி.வி.சிந்து மொமெண்ட்கள்….அதிகம் நம்பிய ரவிகுமார் தாஹியா , தீபக் புனியா , வினேஷ் போகத் போன்றோர் கொடுத்த ஏமாற்றங்களால் , அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளவில்லை…பஜ்ரங் புனியா… Continue reading ஒலிம்பிக் பதக்கம்
Author: Raja Mahalingam
படித்ததில் பிடித்த சரித்திர நாவல்..
“ ஸ்ரீரங்கம் ரங்கமன்னார்” தன் குழந்தைகளை அரவணைத்து எங்கோ ஒரு உச்சாணிக் கொம்பில் ஏற்றி உட்கார வைத்து விடுவார்.இது ரங்கனின் பரிபூரண அருட் கடாட்சம்…..!ஸ்ரீரங்கம் மண்ணின் மகத்துவம் …!!எழுத்தாளர் திரு. கோகுல்சேஷாத்ரி அவர்கள் வரலாற்றில் எம்.ஏ.,எம்.பில் படிப்பு முடித்து சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் ( டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்வித்தியாசமான கதைக் களங்களில் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளுடன் இவர் படைக்கும் புதினங்கள் வாசகர்களை இயல்பாகக் கடந்த காலத்திற்குக் கடத்திச் செல்கின்றன. சென்னை… அண்ணாசாலையிலிருந்து… Continue reading படித்ததில் பிடித்த சரித்திர நாவல்..
சிவாவின் அஷ்டமூர்த்தி வடிவம் பகுதி 1
17 மே 2021.எனது முந்தைய சுயவிவரம் கடந்த 2020 ஆம் ஆண்டில் பேஸ்புக்கால் செயலிழக்கச் செய்யப்பட்டதால், பதினாறு வருடங்களுக்கும் மேலாக நீண்ட காலத்திற்குத் திரட்டப்பட்ட இடுகைகளை நான் கணிசமாக இழந்தேன். எனினும் என் நினைவுகள் முகநூலில் பகிரப்பட்ட சில படங்களுடன் மீண்டும் எழுந்தன, மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு பற்றிய எனது நீண்ட பதிவுகளில் சில அத்தியாயங்களைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமானது என்று கருதினேன். இந்த விஷயத்தில் தொகுதி 1 ஐ தொகுக்க நூறு அத்தியாயங்கள் எழுதியிருந்தேன்.… Continue reading சிவாவின் அஷ்டமூர்த்தி வடிவம் பகுதி 1
எழுத்துச் சித்தரின் வரிகளில் சில…
” கடுமையாக உழைத்தல்என்று அடிக்கடி சொல்கிறார்களே,கடுமையாக உழைத்தல்என்றால் என்ன ?இதுபற்றி எந்தக் கட்டுரையும்வந்ததில்லை, ஆனால் எனக்குஎழுத எண்ணமிருக்கிறது.இது என் வாழ்வின் அனுபவப் பதிவாக மட்டுமில்லாது,உங்களுக்கு அந்த அனுபவத்தைப்பகிர்வதாகவும் இருக்கும்.எனது அனுபவம் உங்களுக்குள்ளேசெய்தியாய் வந்துசேர,உங்களுக்கு அந்த அனுபவம்ஏற்படும்போதுமிக எளிதாக உங்களால்வாழ்வியலைக் கற்றுக்கொள்ளமுடியும்.சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போதுபின்னால் சீட்டைப் பிடித்துக் கொண்டுதன் முழு பலத்தோடு உங்களைவிடசற்று வயதான ஒரு ஸ்நேகிதன்ஓடிவருவான் இல்லையா ,அதுபோலத்தான்.நீங்கள் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொள்ளும்போதுநான் உங்கள் சீட்டைப் பிடித்துக்கொண்டு ஓடி வருவேன். நீங்களாகவேசைக்கிள் ஓட்டிவிடுவீர்கள்என்று எனக்குத் தெரியும்.அப்பொழுது மிகுந்த… Continue reading எழுத்துச் சித்தரின் வரிகளில் சில…
ஆடிபெருக்கு
ஆடி (18) பெருக்கு நன்நாளில்உங்கள் இல்லங்களில்இன்பம் பெருகட்டும் ,அமைதி பெருகட்டும் ,வளம் பெருகட்டும் ,மகிழ்ச்சி பெருகட்டும்,செல்வம் பெருகட்டும் ,நிம்மதி பெருகட்டும், ♡தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்க்கும் என் மனமார்ந்த ஆடி பெருக்கு அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்ஆடி18 பெருக்கு என்றால் என்ன ?ஆடிப்பெருக்கு 18 தாமிரபரணி தாய்க்கு சீர்செய்ய அழைக்கிறதுவிஷ்வ ஹிந்து பரிஷத்?03-08-2021?இந்த பிலவ வருடம் ஆடிப்பெருக்கு(ஆடி 18) 03/08/2021 செவ்வாய்கிழமை வருகிறது.எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், அந்த காரியம் மேலும் மேலும் பெருகும்… Continue reading ஆடிபெருக்கு
ஆதிநாராயணன்
ஓம்நமோநாராயணாய ! ஊரடங்கு வந்ததும் வந்ததுஊர் ஊராய் சுற்றும்எங்களுக்கும்நெருக்கடி வந்ததுமாமி மெஸ் ,லக்ஷ்மி மெஸ்மாயவரம்பவித்ரா மெஸ்இப்படியாக போய்க்கொண்டுஇருந்தது ஒரு காலம்சமீப நாட்களாகவீட்டிலிருந்து ஒரு டிபன்பாக்ஸ்ஒரு பாட்டில் நீர்என்று ஓடிக் கொண்டிருக்கிறோம்.நேற்று மதியம்ஒரு ஊரிலிருந்துஇன்னொரு ஊருக்குசெல்லும் வழியில்ஒரு பிள்ளையார் கோயில்வாசலில் போய் –கையிலிருந்த உணவைஎடுத்துக் கொண்டு உட்கார்ந்தால்எதிரிலே ஏகாந்தமாய்ஒரு பெருமான்நமக்கு சேவை சாதிக்கிறார்.அட இது என்னஆச்சர்யம் ?உள்ளே கணபதிமூலவராய் அமர்ந்திருக்கவெளியேகிழக்கு நோக்கியவாறுஅமர்ந்த நிலையில்காட்சி தந்தார் – அந்த ஆதிநாராயணன் எந்த சிற்பி வடித்ததோ ?எந்த மன்னன் ஆட்சியிலோ ?எந்த… Continue reading ஆதிநாராயணன்
விருத்தகிரீஸ்வர ஆலயம்
இது மீள்பதிவேஇருப்பினும்எனக்குப் பிடித்த திருக்கோயில்,அர்ச்சகர் என்பதால் மறுமுறை …? ? ? தோழமைக்கு #வணக்கம்.. செய்யும் தொழிலேதெய்வம் என்பர் – அந்ததொழிலே தெய்வத்தின் சன்னதியில்என்றால், அதுவே பாக்கியமல்லவோ ?அந்தப் பேற்றினைசிரத்தையாகவே சிரமேற்கொண்டிருக்கும் சிவாச்சார்யார் ஒருவரை கண்டும், பணிந்தும் வந்தேன். ஸ்தலம் :- 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட – அற்புதமானசிற்ப வேலைகளுடன் கூடியசிவாலயம் ..பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில்கிருஷ்ணாபுரம் அடுத்து #வெங்கனூர்.இறைவன் ;-#விருத்தகிரீஸ்வரஸ்வாமி,( பழமலைநாதர்)இறைவியர் ;- #பாலாம்பிகை , #விருத்தாம்பிகை சரி , கோயில் பற்றி நமது… Continue reading விருத்தகிரீஸ்வர ஆலயம்
காக்கையின் உணவு
மஹோன்னதர்களின் வாக்கும்சித்த புருஷர்களின் வார்த்தைகளும்நடைமுறையில்மெய்ப்பிக்கப்படும்போதுதான்அதன் தாக்கம் – இந்தசராசரி மனித வாழ்க்கையில்நமக்கும் புரிகிறது. மஹாகவிசுப்ரமண்யபாரதி கொட்டிய ஜெயபேரிகை இது.,” காக்கை,குருவி எங்கள் ஜாதி- நீள்கடலும், மலையும் எங்கள் கூட்டம்;நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லைநோக்க நோக்கக்களியாட்டம்”ஆம்,இந்த பாடலை சிரமேற்றுதினந்தோறும் காக்கைகளுக்குஉணவிடும்ஒரு மலைநாட்டு மனிதரையேஇன்று பார்க்கப் போகிறோம்.? ? ? ? ?. போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைகளால்மூன்று பக்கமும் சூழ்ந்துஎட்டு திக்குகளிலிருந்தும்ஏலக்காய் வாசனையைகாற்று சுமந்து வர,நடுவிலே ஊரும்நாயக்கர் காலத்து பாளையம்எனும் பெருமையும் கொண்டநகரம் – போடிநாயக்கனூர்.அங்கேதமது வாழ்நாளைவித்தியாசமானதாய் மாற்றிவரும்மனிதர்… Continue reading காக்கையின் உணவு
இயற்கை நிறங்கள்
தோழமைக்கு வணக்கம் ;- எவ்வளவோ நிறங்கள் இயற்கையில் இருந்தாலும், இந்த #அரக்கு_சிவப்பு என்று தமிழில் சொல்லக்கூடிய மெரூன் / செர்ரி ரெட் என்ற நிறமே என்னை மிகவும் கவர்ந்ந நிறம் என்றே சொல்லலாம். — “ஏய் சுஜி, இங்க வந்து பாரேன் – இந்த தடவையும் மெரூன் கலர் காட்டனே உன் பர்த்டேக்கு எடுத்து வந்திருக்கான் ” – இது எங்க அம்மாவின் ஓபனிங் டயலாக், அதன்பிறகு அக்கா அவரது பங்குக்கு – ” இவனுக்கு வேற… Continue reading இயற்கை நிறங்கள்
80’s Kids சலூன் அனுபவம்
#தோழமைக்கு_வணக்கம் ;- அதென்னவோ அந்த நாள் முதல் இன்று வரை சலூன் கடைகள்தான் நமக்கு தகவல் மையங்கள், செய்தி கூடங்கள் எல்லாம். வீட்டு வாசலுக்கே தினசரி பத்திரிக்கை ஆண்டாண்டு காலமாக வந்தாலும் கூட முடிதிருத்தும் நிலையங்களுக்குப் போனால் , அங்கே காத்திருக்கும் தருணங்களில் ஓரிரு பக்கங்களாக செய்திதாள்களை புரட்டுவது தனிசுகமே. — சமீபத்திய ஊரடங்கில் வேர் விட்டு விழுது பரப்பிய தாடி, மீசை, தலைமுடி எல்லாம் சீரமைத்திட தம்பி கண்ணனின் கடைக்குச் சென்றேன் – அவர்தான் நமது… Continue reading 80’s Kids சலூன் அனுபவம்