கார்மேகங்கள்சூழ்ந்த மாலைப்பொழுதுகடலா இல்லைகாவிரியாஎது பெரியது ?என்ற கேள்விக்குறியினைஆச்சர்யக்குறியாக மாற்றிஅதிசயித்துஇன்றையசோழ வம்சத்து பிள்ளைகள்அன்றையசோழன் கரிகாலனின்கல்லணையில்…
Author: Raja Mahalingam
#கிருஷ்ண_ஜெயந்தி
கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்அன்னையரேதுயிலெழுப்ப வாரீரோ !அவன் –பொன்னழகைகாண்பதற்கும்,போதை முத்தம்பெறுவதற்கும்கன்னியரே கோபியரே வாரீரோகன்னியரே கோபியரே வாரீரோ !ஆயர்பாடி மாளிகையில்தாய் மடியில் கன்றினைப்போல்மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !!? ? ? ? ? ?நன்றி ;-திருவாளர் ஓவியர்கேசவ்வெங்கட்ராமன்.
வேழத்தின்_காட்சி
யாருக்குத்தான் பிடிக்காதுபிரம்மாண்டம் ?“அலைவீசும் கடல்ஆர்ப்பரிக்கும் அருவிஅண்ணாந்து பார்க்கும் கோபுரம்விண் தொடும் மலை முகடுவிரிந்து கிடக்கும் சமுத்திரம் “இப்படிஉயர்ந்தவை, விரிந்தவை, பரந்தவைஆகியஎல்லா பிரம்மாண்டங்களும்அந்நியன் – ஷங்கர் முதல்அக்கட தேசத்து ராஜமௌலி வரைஎல்லாரின் படைப்புகளும்…ரசிக்கத்தக்கவையேபிரமிக்கத்தக்கவையே.,அவ்வரிசையில்// களிறு,புகர்முகம்,கயவாய்,பிடி,வேழம்,கைம்மா(ன்),கோட்டுமா,கயந்தலை,கயமா,பொங்கடி,பிணிமுகம்,மதமா,வாரணம்,குஞ்சரம்,கரி //இப்படி பல பெயர்களில்தமிழ் இலக்கியம் கொண்டாடும்யானை தான்,காலையில் பிரமிக்க வைத்ததுஎன்னைத் தான் !—எத்தனை வயதானாலும் நமக்கு,ஒரு யானைஒய்யாரமாகசாலையில் நடந்துப் போகையில்வண்டியை நிறுத்தி விட்டுரசிக்கவும்தும்பிக்கையில் காசு வைத்துவணங்கிடவும் தான்தோன்றுகிறது…அதிகாலை_சுபவேளை M. #Raja_Mahalingamதிருக்கோடிக்காவல்.
சுவாமிமலை
” சற்றே விலகி இரும் பிள்ளாய்(சன்னிதானம் – இல்லை)#சுவாமிமலை_மறைக்குதாம் “மயிலாடுதுறை மாவட்டம்திருப்புன்கூர் தலத்து உறைந்த இறைவன் – சிவலோகநாதஸ்வாமிதனது அடியார் –திருநாளைப்போவார் – தன்னைதரிசிக்க வேண்டுமென்பதற்காக//சற்றே விலகியிரும் பிள்ளாய்சந்நிதானம் மறைக்குதாம் // என்றுநந்தியெம்பெருமானை விலகிநிற்கச் சொன்னவுடனேநந்தியும் சற்று விலகி அமர்ந்ததாகஸ்தலபுராணம் சொல்லும் கதைஉண்டு.—ஆனால் இது கொஞ்சம்வித்தியாசமான களம்,இந்த நந்திஅமர்ந்த இடமோ வேறு.திருவையாறு – சுவாமிமலைசெல்லும் சாலையில் கணபதி_அக்ரஹாரம் எனும் புராதனமான காவிரி கிராமத்தின்மேற்கு எல்லையில் அமைந்துள்ளார்.அதுவோ,காவிரியின் வடகரையைஒட்டி செல்லும் சாலை.அந்த சாலை அருகேஒரு வாய்க்காலின் மீது அமைந்தசிறு… Continue reading சுவாமிமலை
வளரும்_தலைமுறை
வாழ்ந்த_ஐயன் வாழும்_எழுத்து வளரும்_தலைமுறை ;- தோழமைக்கு வணக்கம்,என் சிற்றறிவின் அபிப்ராயத்தில்நினைத்திருந்த ஓர் விஷயத்தினை பகிர்கிறேன் இங்கே. ஞானிகளோ,மகான்களோ,சித்த புருஷர்களோ ,தேசியவாதிகளோ,கவிஞர்களோ இல்லைபடைப்பாளிகளோ ..அது எவராயினும் அவர்கள் வாழ்ந்தகாலத்தினை விட – வாழ்ந்துமறைந்த பின்பே, இன்னும் அடுத்ததலைமுறையாலேயே அதிகம்கொண்டாடவும்வணங்கவும்துதிக்கவும் பெறுகின்றனர்.உதாரணமாக.. காஞ்சி #மஹாப்பெரியவாள் விவேகானந்தர்பாரதியார்காமராஜர்இப்படியாக பல மகான்கள்,சான்றோர்கள் எல்லாம் அவர்களதுவாழ்நாளை விடஇப்போதுதான் அதிகம் நினைக்கப்படுகின்றனர். சரி இங்கே நமது பதிவிற்கு வருகிறேன். எனது அக்காவின் மூத்த பிள்ளை அர்ஜூன்_ரிஷி , தன்னுடைய பதின்பருவத்தில்இப்போது பலஆண்டுகளாகவேதபாடசாலையில் படிக்கும்ஓர் மாணவன்.நானும் எனது… Continue reading வளரும்_தலைமுறை
கோயில் அர்ச்சகர்
கடந்த இரு தினங்களில்பல திருக்கோயில் அர்ச்சகர்களின்பரம்பரையான வேலைபறிக்கப்பட்டு , அவர்கள் மனமுடைந்து புலம்பும் செய்திகள் – சமூக ஊடகங்களில் வந்தவண்ணம்இருக்கின்றன.மரபுகளிலும், சம்பிரதாயங்களிலும்அத்துமீறுவது எவ்வகையில்நல்லது ?இது எவ்விதத்தில் சமயசார்பின்மை ?நடுநிலைமை ?சரி , காலங்காலமாககடைபிடித்துவந்த சம்பிரதாயங்களைமீறி ஒருவரின் வேலையைப்பறித்து இன்னொருவருக்குகொடுத்து தான்இந்த மாநிலத்தில்சமூகநீதியினைநிலைநாட்ட முடியும்என்ற முடிவுக்குஆட்சியாளர்களும்ஊடகங்களும் வந்ததேமிகப்பெரும் துரதிருஷ்டம்.— வெளிநாட்டிலோதலைநகரிலோ கணிசமானவருமானம் ஈட்டி வந்தஇன்றைய தலைமுறைஅர்ச்சகர்கள் –அவர்களின் சொந்த கிராமத்தில்தந்தையின் மறைவுக்குப் பிறகுதிருக்கோயில் –பூஜை இல்லாமல் நிற்கக் கூடாதுஎன்றுதனது பாரம்பர்ய முறை இருக்கும்அதுவும் சிறிதும் பொருளாதாரமேஇல்லாத கிராமத்து சிறுகோயில்களின்சாவியை… Continue reading கோயில் அர்ச்சகர்
ஆலமரமாம் பாரததேசமும்
அதன்ஆணிவேராய் #இந்துமதமும்..சரித்திர நிகழ்வுகள் ஆயிரங்கொண்டஇந்த திருநாட்டின்ஆன்மீகமும், பாரம்பர்யமும்தழைத்திட,சனாதனமாம்இந்து தர்மம்காலங்காலமாகஎத்துனையோ யோகப்புருஷர்களைதந்த வண்ணமே இருந்துள்ளது.அது இந்த தேசத்தின்சுதந்திர போராட்டத்திற்கும்தனது பங்காகதலைவர்களை மட்டுமல்ல,நிறையசாதுக்களையும்பிரம்மச்சாரிகளையும்சத்தியசீலர்களையும்வழங்கியிருக்கிறது.அதன் தொடர்ச்சியாகவோஎன்னவோபல நூற்றாண்டுகளாகதமிழ் வளர்த்ததமிழ் திருமுறைகள் காத்துவந்தசிவநெறி பரப்பி வந்த திருவாவடுதுறை ஆதீனத்திருமடம் அதன் முத்தாய்ப்பாக இந்தியநாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நன்னாளில்அந்த விழாக்கொண்டாட்டத்தில்பங்கேற்றுபாரதப் பிரதமர்ஜவஹர்லால் நேரு அவர்கள் வசம் செங்கோல் ஒன்றினை தந்துசுதந்திர இந்தியாவின் முதல் தலைவனை நமது தென்னகத்துசார்பாக வாழ்த்திஅருளாசி வழங்கி வந்ததும்திருவாவடுதுறை ஆதீனமே.மேலும், தன்னுடையகுருபரம்பரையின் மூலமாக,சுதந்திர போராட்டத் தியாகிகளைபோஷித்து,தலைவர்களை கௌரவித்துஇந்தியா… Continue reading ஆலமரமாம் பாரததேசமும்
வேதாரண்யம்
திருமறைக்காடு எனும் வேதாரண்யம் – ஆகிய புனித ஸ்தலத்திலே மணிகர்ணிகை_தீர்த்தத்திலே நீராட – நிதமும்விளையாடஇந்த ஜீவராசிகள்என்ன தவம் செய்தனவோ !!M. Raja Mahalingam
மஹாகவி
” ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம் .. வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்… “ #மஹாகவியை #மனதாரப்_போற்றுவோம்.
தண்டந்தோட்டம் #சிவாலயம்
தோழமைக்கு வணக்கங்கள்,தினசரி நித்யபடி பூஜையிலேயேஅழகான அலங்காரத்துடன்சிவலிங்கத்தினை தரிசிக்கத் தூண்டுபவர்,சிவாச்சார்யார்திரு. Natarajagurukkal Raju அவர்கள்.இறைவனுக்கு உகந்த#ஆருத்ரா தரிசனம்என்றால்,அதுவும் இறைவனின் திருநாமம் நடனபுரீஸ்வரஸ்வாமி எனுப்போது,என்னவெல்லாம் செய்திருப்பார் ?எப்படியெல்லாம்அலங்கரித்திருப்பார் ?வாருங்களேன் நாமும்தரிசிக்கலாம்.கும்பகோணம் –திருநாகேஸ்வரம் –அருகே அமைந்துள்ள தடைகளை #நீக்கும் #தண்டந்தோட்டம் எனும் பெயர் பெற்ற சிவாலயம். பொதுவாகவே நமது ஆலய வழிபாட்டில்இறைவனின் திருமேனி அலங்காரத்தினைப் பொறுத்தவரையில்பக்தர்கள் அனைவருமே –சிவன் – அபிஷேகப் பிரியர்பெருமாள் – அலங்காரப் பிரியர் என்பர்.அதென்னவோபெருமாள், அம்பாள் , சுப்ரமணியர்திருமேனிகளுக்கு அலங்காரத்தினை எவ்வளவுசிரத்தையாக , நேர்த்தியாக செய்ய முடியுமோ… Continue reading தண்டந்தோட்டம் #சிவாலயம்