ஒலிம்பிக் பதக்கம்

இது நரேந்திரர் ஆளும் தேசம்ஜெய்ஹிந்த். வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்…சரியாகப் பார்க்க முடியாமல் கண்ணீர் மறைத்துவிட்டது…1988 சியோல் ஒலிம்பிக்கிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறேன்… எத்தனையோ ஏமாற்றங்கள்…சில லியாண்டர் பயஸ் , கர்ணம் மல்லேஸ்வரி , அபினவ் பிந்த்ரா , ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் , சாய்னா நெஹ்வால் , பி.வி.சிந்து மொமெண்ட்கள்….அதிகம் நம்பிய ரவிகுமார் தாஹியா , தீபக் புனியா , வினேஷ் போகத் போன்றோர் கொடுத்த ஏமாற்றங்களால் , அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளவில்லை…பஜ்ரங் புனியா… Continue reading ஒலிம்பிக் பதக்கம்

கோ(வி)தை

மேலே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? அடியேனுக்கு ஆண்டாள் தான் நினைவுக்கு வந்தாள். எப்படி என்று சொல்கிறேன்.ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விதை எது ?முதல் தனி வித்தேயோ, முழு மூவுலகுஆதிக்கு எல்லாம்!முதல் தனி உன்னை, உன்னைஎனை நாள் வந்து கூடுவன்-நான்முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்முதல் தனி சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து,உயர்ந்த முடிவிலீ! ஓ!மூன்று உலகங்கள் தொடங்கி அனைத்துக்கும் முதல் தனி வித்தே, அங்கும், இங்கும் என எங்கும் முழுமையாக நிறைந்திருக்கிறவனே, வாழ்க்கைக்கு… Continue reading கோ(வி)தை

#பெருமாள்_கோவில்களில் நுழைந்தவுடன் யாரை வழிபடவேண்டும்?

பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு… Continue reading #பெருமாள்_கோவில்களில் நுழைந்தவுடன் யாரை வழிபடவேண்டும்?

பிறவி குணம் மாறாது

ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது.அப்போது ஒரு தேள் ஓடிவந்து,“ஆமை அண்ணா..! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது.உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன்” என்றது!ஆமைக்குப் பாவமாக இருந்தது.இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக ,“ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமாதான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன். ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ அவ்வளவுதான் சரியா?”என்று சொல்லி தன் முதுகில் ஏற்றிக்கொண்டது.தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது.… Continue reading பிறவி குணம் மாறாது

மனிதனை திருத்த-கதை

ஞானி ஒருவர் :ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன்_ஒருவன் வந்தான் ” சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்? என்று கேட்டான். ஞானி_அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான்… Continue reading மனிதனை திருத்த-கதை

படித்ததில் பிடித்த சரித்திர நாவல்..

“ ஸ்ரீரங்கம் ரங்கமன்னார்” தன் குழந்தைகளை அரவணைத்து எங்கோ ஒரு உச்சாணிக் கொம்பில் ஏற்றி உட்கார வைத்து விடுவார்.இது ரங்கனின் பரிபூரண அருட் கடாட்சம்…..!ஸ்ரீரங்கம் மண்ணின் மகத்துவம் …!!எழுத்தாளர் திரு. கோகுல்சேஷாத்ரி அவர்கள் வரலாற்றில் எம்.ஏ.,எம்.பில் படிப்பு முடித்து சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் ( டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்வித்தியாசமான கதைக் களங்களில் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளுடன் இவர் படைக்கும் புதினங்கள் வாசகர்களை இயல்பாகக் கடந்த காலத்திற்குக் கடத்திச் செல்கின்றன. சென்னை… அண்ணாசாலையிலிருந்து… Continue reading படித்ததில் பிடித்த சரித்திர நாவல்..

சிவாவின் அஷ்டமூர்த்தி வடிவம் பகுதி 1

17 மே 2021.எனது முந்தைய சுயவிவரம் கடந்த 2020 ஆம் ஆண்டில் பேஸ்புக்கால் செயலிழக்கச் செய்யப்பட்டதால், பதினாறு வருடங்களுக்கும் மேலாக நீண்ட காலத்திற்குத் திரட்டப்பட்ட இடுகைகளை நான் கணிசமாக இழந்தேன். எனினும் என் நினைவுகள் முகநூலில் பகிரப்பட்ட சில படங்களுடன் மீண்டும் எழுந்தன, மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு பற்றிய எனது நீண்ட பதிவுகளில் சில அத்தியாயங்களைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமானது என்று கருதினேன். இந்த விஷயத்தில் தொகுதி 1 ஐ தொகுக்க நூறு அத்தியாயங்கள் எழுதியிருந்தேன்.… Continue reading சிவாவின் அஷ்டமூர்த்தி வடிவம் பகுதி 1

நடக்காததை நடத்திக் காட்டும் நரசிம்ம மந்திரம்!

வாழ்க்கையில் எல்லோருமே நினைப்பது நடக்க வேண்டும், எல்லாமே நல்லதாகவே நடக்க வேண்டும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால், நாம் நினைப்பதெலலம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பதற்கேற்ப சோதனைகள் வருவதுண்டு. நினைப்பதும் நடப்பதில்லை.மாறாக எதிர்பாராத ஒன்று தான் நடக்கும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நாம் நினைப்பதையும், நடக்காது என்று நினைத்தவற்றை நடத்திக் காட்டவும் நரம்மரின் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்…நடக்காதது, நினைக்காதது என்று அனைத்தும் நமக்கு நல்லபடியாக நடந்து முடியும். நரசிம்ம… Continue reading நடக்காததை நடத்திக் காட்டும் நரசிம்ம மந்திரம்!

எழுத்துச் சித்தரின் வரிகளில் சில…

” கடுமையாக உழைத்தல்என்று அடிக்கடி சொல்கிறார்களே,கடுமையாக உழைத்தல்என்றால் என்ன ?இதுபற்றி எந்தக் கட்டுரையும்வந்ததில்லை, ஆனால் எனக்குஎழுத எண்ணமிருக்கிறது.இது என் வாழ்வின் அனுபவப் பதிவாக மட்டுமில்லாது,உங்களுக்கு அந்த அனுபவத்தைப்பகிர்வதாகவும் இருக்கும்.எனது அனுபவம் உங்களுக்குள்ளேசெய்தியாய் வந்துசேர,உங்களுக்கு அந்த அனுபவம்ஏற்படும்போதுமிக எளிதாக உங்களால்வாழ்வியலைக் கற்றுக்கொள்ளமுடியும்.சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போதுபின்னால் சீட்டைப் பிடித்துக் கொண்டுதன் முழு பலத்தோடு உங்களைவிடசற்று வயதான ஒரு ஸ்நேகிதன்ஓடிவருவான் இல்லையா ,அதுபோலத்தான்.நீங்கள் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொள்ளும்போதுநான் உங்கள் சீட்டைப் பிடித்துக்கொண்டு ஓடி வருவேன். நீங்களாகவேசைக்கிள் ஓட்டிவிடுவீர்கள்என்று எனக்குத் தெரியும்.அப்பொழுது மிகுந்த… Continue reading எழுத்துச் சித்தரின் வரிகளில் சில…

தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.

இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.உதாரணமாக,“தேர் ஓடுவது எதனால்?தெருவை மெழுகுவது எதனால்?” என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,“அச்சாணியால்” என்பது.தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவதுஅச் – சாணியால்என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.“நீ வசிக்கும் ஊர் எது?உன் காலில் காயம் வந்தது எப்படி?”என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் “செங்கல்பட்டு” என்பது.“சாம்பார் மணப்பதேன்?உடல் நலிவதேன்?” என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் “பெருங்காயத்தால்!” என்பது.இன்று ஆங்கில வழிக்… Continue reading தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.