அருந்தமிழும் அன்றாட வழக்கும்-10

பாதுகாக்கப்படும் தமிழ் மொழி நலம்..! ================================================= “இனி உரப்பியும், எடுத்துங்கனைத்தும் வருகின்ற செயற்கையொலிகள் ஆரியத்தில் உண்டென்பர் நச்சினார்க்கினியர், உரப்போடு கூடிய எழுத்துகள், கவ்வருக்கம் முதற் பவ்வருக்கம் முடிய ஐந்து வருக்கங்களிலுமுள்ள இரண்டாம் எழுத்துகளாம். எடுப்போடு கூடிய வெழுத்துகள், ஐந்து வருக்கங்களில் மூன்றாம் எழுத்துகளாம். கனைப்போடு கூடிய வெழுத்துகள், அவற்றில் நான்காம் எழுத்துகளாம். ஏனைய வெழுத்தொலிகளிற் சொற் பயிலாமை நோக்கி அவற்றை விட்டனரென்க. இனி, இற்றைக்கு ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த பவணந்தி முனிவர், தொல்காப்பியனார் பொதுவகையில் வகுத்த… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-10

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4

மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்ததே..! மொழிக்கலப்பின் தொன்மை  ஒரு மொழியின் கூறுகளான பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய இரண்டிலும் மொழிக்கலப்பு நேர்கின்றது. ‘மனிதன் தன் சிந்தனை’த் திறத்தால் புதியன கண்டு, கேட்டு, அமைத்துப் போற்றிடும் சிறந்த நாகரிகக் கூறாக மொழி உருவெடுக்கின்றது. எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆகிய எல்லாவற்றையும் கடந்து மொழியை மாந்தன் தன் சிந்தனையால், உறவுத்தொடர்பால் எப்படியோ வளர்த்துக் காத்து வந்திருக்கிறான் என்பது வியப்பைத் தருவதாகும். இவ்வாறு காக்கப்படும் மொழி யின்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

மொழியே இணைப்புப் பாலம்..! மொழிக் கலப்பு   மொழித் திறன் என்பது நாட்டு மக்கள் வளர்த்துக் காக்கும் திறனுடைமையின் பயனாகும். ஒருவருக்கொருவர் உரையாடி மகிழும் மொழியே மக்களின் அறிவுப் பெருக்கத்தால் செழுமையான மொழியாக மாறும் பல இன, மொழி மக்களின் இயக்கமாக உலகம் உள்ளது. மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முதலில் உணர்வைச் சிறுசிறு சொற்கள் கொண்ட மொழியாகத் தன்னைப் போல் அவற்றை அறிந்தவரிடம் உரையாடுகிறான். தனி ஒரு மனிதனின் தேவை என்ற நிலையிலிருந்து அவன்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 6

தகடூரான் தந்த தமிழ்க்கனி ! சோவியத்தின் இலக்கியச் சிகரமான டால்ஸ்டாயின் எழுத்தின் தொகுதி 90 மடலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன . எழுதிய மடல்கள் , அவருக்கு வந்த கடிதங்கள் 32 தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன . இந்தியத் தலைநகரான கொல்கத்தாவில் – முதன்மைத் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த பெருந்தகை கர்சான் தன் கையால் நூறு பக்க அளவில் தன் துணைவியாருக்குக் கடிதம் எழுதினார் . இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாள் தவறாமல் தன் மனைவியாருக்கு இங்கிலாந்துக்குக் கடிதம் எழுதி வந்தாராம்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 6

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2

‘‘பிறமொழிக் கலப்பை நீக்கிப் பேசவும் எழுதவும் பழகு!” =================================================================   அகராதியியலாளர்களின் கருத்துப்படி அயல்மொழிச் சொற்கள் அருந்தமிழில் பேச்சு வழக்கில் முதலில் கலந்து பிறகு எழுத்து வழக்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எழுத்து வழக்கில் அயன் மொழிச் சொற்கள் ஏற்கப்படுவதும், அவை பிறகு முறையே பேச்சு வழக்கிலும் இடம்பெற நேர்வது உண்டெனினும், அவற்றின் தொகை குறைவே.  பிறமொழிச் செல்வாக்கால் ஆசாமி, இலாகா, கஜானா, முனிசீப் போன்ற சொற்கள் பேச்சு வழக்கில் நுழைந்தன. எழுத்து வழக்கில் மேற்கூறிய பொருள்களைக் குறித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1

  =================================================================   மக்கள் தமக்குத் தாமே ஆர்வத்தோடு படைத்து வளர்த்துப் பல்லாண்டுகளாகக் காத்து வரும் அரிய திறமே மொழியாகும். மாந்தர்க்கு அமைந்த தனிச்சிறப்புகளில் தலையாயதாக அமையும் புலப்பாட்டு உணர்வே அறிவை மாந்தரிடத்தே வளர்த்து உயர்த்தும் திறனும் ஒரு மொழிக்கே வாய்ப்பதாகும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் மாணவராகவும் ஒருசேர அமைகின்றனர். மொழியை வளர்ப் பவரும் மக்களே மொழியால் வளர்பவரும் மக்களே. இவ்வாறு மக்களின் மனவுணர்வும் வாழ்வு நலங்களும் மொழியின் துணையோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேம்பட்டு வருகின்றன.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 5

மிச்சிகன் பல்கலைக்கழகத்து மொழியியல் பேராசிரியர்களாயிருந்த ஏ.எல்.பெக்கர் கீத் டெய்லர் சிகாகோ பல்கலைக்கழகத்துப் பேரறிஞர் ஏ.கே. இராமனுஜனுடன் நிகழ்த்திய கலந்துரையாடலில் வரும் தொல்காப்பியரைப் பற்றிய முடிவுகள் நாம் வியந்து போற்ற வேண்டியவை அறிஞர் பெக்கர்,அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களில் எல்லாம் தொல்காப்பியரின் சிலையை நிறுவவேண்டும்; ஏனெனில் மேலை உலகின் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றாரோடு அவர் ஒப்பிடற்குரிய தகுதி பெற்றவர் ; தொல்காப்பியரின்  சிந்தனையாற்றல், கற்பனைத்திறன், மொழியின்பால் காட்டிய ஆர்வம் வழியாகத் தொல்காப்பியர் தமிழின் அறிவுலகைத் திறந்துள்ளார் ; மொழி பற்றிய… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 5

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 4

ஒரு நாட்டின் மரபு ,பண்பாடு ,மொழித்திறம் ,பழக்க வழக்கம் ,நம்பிக்கை , எப்படியோ வந்து சேர்ந்த வழிபாட்டுச் சடங்கு முதலிய நிலைகளோடு தொல்லாய்வில் கிட்டும் கலன்கள் – கற்கள் போலத் தொல்லிலக்கியங்களில் இடம் பெறும் குறிப்புக்களை இலக்கிய ஆய்வோடு மானிடவியல் , மாந்தர் மரபியல் சேர்த்து அறிவியற் கருவி ,ஆடிகளுடன் சேர்த்து உலகியல் அனைத்து நிலைகளிலும் ஆய்வுகள் நடந்துள்ளன . வீரமும் காதலுமே வாழ்வின் அகம் புறமாகத் தமிழர்கள் வாழ்வின் உறுதிப் பொருளாகக் கருதினர் போர்வீரர்களின் புகழும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 4

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3

யாதும் ஊரே; யாவரும் கேளிர் ! கலைஞரின் பிறந்த பொன்னாள் நமக்கெல்லாம் நலிவு தீர்த்த நன்னாள் . சிகரத்தை இழந்து சிந்தை நிலைகுலைந்து வாடினாலும் பிறந்தநாள் வலம் வருகிறது . வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தோடி வந்து நான் காப்பேன் என்ற புதிய விடியலோடு நம் முதலமைச்சர் நமக்கு ஆறுதல் வழங்க அரியணையில் அமர்ந்துள்ளார் . கொடுந்தொற்றின் அடாத கொடுமையை நீக்க நாளும் அரசு கண் துஞ்சாது பணியாற்றுகின்றது . கலைஞரின் நினைவு நாள் என்றும் நமக்கு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2

அமெரிக்க ஆய்வறிஞரின் புகழாரம் ! உலகப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளில் தெற்காசிய மொழிகளை ஆராயும் துறைகளை உருவாக்கியிருந்தனர் . அமெரிக்க நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை இன்றும் விளங்குகிறது. இத்துறைகளில் வடமொழியே முதன்மை பெற்றாலும் தமிழ் மொழியும் துளிர்த்துண்டு. பெர்க்லி மாநகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள் ஆய்வுத்துறை நிறுவிய பத்தாம் ஆண்டு நினைவைப் பாராட்டும் வகையில் கலைஞர் களஞ்சியம் என்னும் பெயரில் ஏறத்தாழ 1300 பக்கங்களைக் கொண்ட அருங்கலைப் பேழையாகக் கலைஞர் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2