இந்துத்தானியம், இந்தி மொழிச் சொற்கள் தமிழில்பங்குகொண்ட வரலாறு பெருமக்களே! கடந்த 24 வாரங்களாக நான் எழுதிவரும் மொழியியல் கட்டுரை பெரும் வரவேற்புப் பெற்று பலர் பல வினாக்களை எனக்கு மின்னஞ்சலிலும், கருத்துகளை தொலைபேசியிலும் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் நான் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். ஐந்தாம் வகுப்பு பயிலும்போதே என்னுடைய கணக்காசிரியர் திருமதி இராஜலட்சுமி அம்மையார், நான் சரியாகக் கணக்குப் பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை என்பதை என்னிடம் சுட்டிக்காட்டினாலும், அதே… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 25
Tag: Arunthamizhum
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-24
பாரசீகம் மற்றும் பிறநாட்டு மொழிச்சொற்கள் தமிழில் கலந்த வரலாறு என் அருமைத்தம்பி தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரான பரதனும், என்னுடைய மைத்துனர் புகழ்வாய்ந்த மென்பொறியாளர் தங்கவேலு இராமலிங்கம் என்கிற சக்தி ஆகிய இருவரும் அடிக்கடி என்னிடம் சொல்லுவது, எந்தத் தகவலையோ, தரவையோ, கணக்கையோ, மருத்துவ, பணிக் கோப்புகளையோ ஐந்து நிமிடத்திற்குள் கணினியிலிருந்து மீள எடுப்பதில் தகுதிவாய்ந்தவராக இருக்க வேண்டுமென்று. அங்ஙனம் இல்லையென்றால், கணினிப் பயன்பாட்டில் நீங்கள் வளரவேயில்லை என்பது பொருளாகும் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். இன்றைய இளைஞர் உலக… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-24
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-12
மொழிக்கலப்பும் – நன்னூல் காட்டும் நெறிப்பாடும்..! ================================================= நன்னூல் பதவியலில், வடமொழியாக்கம் பற்றிய அயல் வழக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. இடையில் நான்கும், ஈற்றில் இரண்டும், அல்லா அச் ஐ வருக்கம் முதல், ஈறு; யவ் ஆதி நான்மை, ளவ், ஆகும் ஐ-ஐம் பொது எழுத்து; ஒழிந்த நால்-ஏழும் திரியும். (19) அவற்றுள், ஏழாம் உயிர் இய்யும் இருவும்; ஐ வருக்கத்து இடையில் முன்றும், அவ்அம் முதலும், எட்டே யவ்வும்; முப்பது ச, யவும்; மேல் ஒன்று ச, டவும்;… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-12
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4
மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்ததே..! மொழிக்கலப்பின் தொன்மை ஒரு மொழியின் கூறுகளான பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய இரண்டிலும் மொழிக்கலப்பு நேர்கின்றது. ‘மனிதன் தன் சிந்தனை’த் திறத்தால் புதியன கண்டு, கேட்டு, அமைத்துப் போற்றிடும் சிறந்த நாகரிகக் கூறாக மொழி உருவெடுக்கின்றது. எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆகிய எல்லாவற்றையும் கடந்து மொழியை மாந்தன் தன் சிந்தனையால், உறவுத்தொடர்பால் எப்படியோ வளர்த்துக் காத்து வந்திருக்கிறான் என்பது வியப்பைத் தருவதாகும். இவ்வாறு காக்கப்படும் மொழி யின்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4