அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 35

“வளர்க வாழைக்கன்று” ஒருமுறை ஒரு விளம்பரத்தை நான் தமிழில் இவ்வாறு எழுதியிருந்தேன். அதாவது, முதன்முதலில் தொலைக்காட்சிக்கு வேண்டிய ‘டிஷ் ஆன்டெனா’ சென்னைக்கு வந்தபொழுது, அதை விளம்பரமாக வரைவதற்காகப் பெங்களூரைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சென்னைக்கு வந்திருந்தார்கள். யாரோ சொன்னார்கள் என்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரம் வரைவதற்காகத் தீர்மானித்தார்கள். ‘டிஷ் ஆன்டெனா’ மூலமாகத் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சன் டிவி, ஜெயின் டிவி, ஜீ டிவி, சிஎன்என் டிவி, பிபிசி டிவி இவைகளையெல்லாம் பார்ப்பதற்கு இந்த ‘ஆன்டெனா’ உதவுகிறது… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 35

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-16

ஊர்கூடித் தேரிழுக்க ஒன்றாக இணைவோம்..! சென்ற வாரம் என் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னை வினவினார்.உலகில் பிறமொழிச் சொற்கள் கலக்காத மொழி ஏதுமில்லை. சீனம் பிறமொழிச் சொற்களை ஏற்பதில்லை என்பது முற்றிலும் சரியான கருத்து அல்ல. கம்பன் பயன்படுத்திய ஐயோ என்ற சொல் இன்றும் அதே பொருளில் சீனத்தில் வழக்கிலுள்ளது. மலாய் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன (எ-டு: கடை) பிற மொழிகள் தமிழ்ச் சொற்களை ஏற்கும்போது பெருமிதம் கொள்ளும் நாம், தமிழ் பிற… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-16

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2

‘‘பிறமொழிக் கலப்பை நீக்கிப் பேசவும் எழுதவும் பழகு!” =================================================================   அகராதியியலாளர்களின் கருத்துப்படி அயல்மொழிச் சொற்கள் அருந்தமிழில் பேச்சு வழக்கில் முதலில் கலந்து பிறகு எழுத்து வழக்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எழுத்து வழக்கில் அயன் மொழிச் சொற்கள் ஏற்கப்படுவதும், அவை பிறகு முறையே பேச்சு வழக்கிலும் இடம்பெற நேர்வது உண்டெனினும், அவற்றின் தொகை குறைவே.  பிறமொழிச் செல்வாக்கால் ஆசாமி, இலாகா, கஜானா, முனிசீப் போன்ற சொற்கள் பேச்சு வழக்கில் நுழைந்தன. எழுத்து வழக்கில் மேற்கூறிய பொருள்களைக் குறித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1

  =================================================================   மக்கள் தமக்குத் தாமே ஆர்வத்தோடு படைத்து வளர்த்துப் பல்லாண்டுகளாகக் காத்து வரும் அரிய திறமே மொழியாகும். மாந்தர்க்கு அமைந்த தனிச்சிறப்புகளில் தலையாயதாக அமையும் புலப்பாட்டு உணர்வே அறிவை மாந்தரிடத்தே வளர்த்து உயர்த்தும் திறனும் ஒரு மொழிக்கே வாய்ப்பதாகும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் மாணவராகவும் ஒருசேர அமைகின்றனர். மொழியை வளர்ப் பவரும் மக்களே மொழியால் வளர்பவரும் மக்களே. இவ்வாறு மக்களின் மனவுணர்வும் வாழ்வு நலங்களும் மொழியின் துணையோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேம்பட்டு வருகின்றன.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1