அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

மொழியே இணைப்புப் பாலம்..! மொழிக் கலப்பு   மொழித் திறன் என்பது நாட்டு மக்கள் வளர்த்துக் காக்கும் திறனுடைமையின் பயனாகும். ஒருவருக்கொருவர் உரையாடி மகிழும் மொழியே மக்களின் அறிவுப் பெருக்கத்தால் செழுமையான மொழியாக மாறும் பல இன, மொழி மக்களின் இயக்கமாக உலகம் உள்ளது. மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முதலில் உணர்வைச் சிறுசிறு சொற்கள் கொண்ட மொழியாகத் தன்னைப் போல் அவற்றை அறிந்தவரிடம் உரையாடுகிறான். தனி ஒரு மனிதனின் தேவை என்ற நிலையிலிருந்து அவன்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1

  =================================================================   மக்கள் தமக்குத் தாமே ஆர்வத்தோடு படைத்து வளர்த்துப் பல்லாண்டுகளாகக் காத்து வரும் அரிய திறமே மொழியாகும். மாந்தர்க்கு அமைந்த தனிச்சிறப்புகளில் தலையாயதாக அமையும் புலப்பாட்டு உணர்வே அறிவை மாந்தரிடத்தே வளர்த்து உயர்த்தும் திறனும் ஒரு மொழிக்கே வாய்ப்பதாகும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் மாணவராகவும் ஒருசேர அமைகின்றனர். மொழியை வளர்ப் பவரும் மக்களே மொழியால் வளர்பவரும் மக்களே. இவ்வாறு மக்களின் மனவுணர்வும் வாழ்வு நலங்களும் மொழியின் துணையோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேம்பட்டு வருகின்றன.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1