அருந்தமிழும் அன்றாட வழக்கும்-12

மொழிக்கலப்பும் – நன்னூல் காட்டும் நெறிப்பாடும்..! ================================================= நன்னூல் பதவியலில், வடமொழியாக்கம் பற்றிய அயல் வழக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. இடையில் நான்கும், ஈற்றில் இரண்டும், அல்லா அச் ஐ வருக்கம் முதல், ஈறு; யவ் ஆதி நான்மை, ளவ், ஆகும் ஐ-ஐம் பொது எழுத்து; ஒழிந்த நால்-ஏழும் திரியும். (19) அவற்றுள், ஏழாம் உயிர் இய்யும் இருவும்; ஐ வருக்கத்து இடையில் முன்றும், அவ்அம் முதலும், எட்டே யவ்வும்; முப்பது ச, யவும்; மேல் ஒன்று ச, டவும்;… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-12

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4

மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்ததே..! மொழிக்கலப்பின் தொன்மை  ஒரு மொழியின் கூறுகளான பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய இரண்டிலும் மொழிக்கலப்பு நேர்கின்றது. ‘மனிதன் தன் சிந்தனை’த் திறத்தால் புதியன கண்டு, கேட்டு, அமைத்துப் போற்றிடும் சிறந்த நாகரிகக் கூறாக மொழி உருவெடுக்கின்றது. எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆகிய எல்லாவற்றையும் கடந்து மொழியை மாந்தன் தன் சிந்தனையால், உறவுத்தொடர்பால் எப்படியோ வளர்த்துக் காத்து வந்திருக்கிறான் என்பது வியப்பைத் தருவதாகும். இவ்வாறு காக்கப்படும் மொழி யின்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

மொழியே இணைப்புப் பாலம்..! மொழிக் கலப்பு   மொழித் திறன் என்பது நாட்டு மக்கள் வளர்த்துக் காக்கும் திறனுடைமையின் பயனாகும். ஒருவருக்கொருவர் உரையாடி மகிழும் மொழியே மக்களின் அறிவுப் பெருக்கத்தால் செழுமையான மொழியாக மாறும் பல இன, மொழி மக்களின் இயக்கமாக உலகம் உள்ளது. மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முதலில் உணர்வைச் சிறுசிறு சொற்கள் கொண்ட மொழியாகத் தன்னைப் போல் அவற்றை அறிந்தவரிடம் உரையாடுகிறான். தனி ஒரு மனிதனின் தேவை என்ற நிலையிலிருந்து அவன்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3