“சாதித்து வெல்பவர் சாந்தகுமார்” 1974-ஆம் ஆண்டு முதல் 1992 வரையில் தலைமைச் செயலகத்தில் எந்தையார் செய்தித் துறையின் துணை இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் உயர்திரு அரசு செயலாளராக அமர்ந்திருந்த வரையிலும், தமிழன்பர்களுக்கும், புலவர்களுக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கும் இளைப்பாறும் குளிர்நிழல் தென்றலாக, மன்றமாக அவரின் அலுவலகத்தைப் போற்றிப் பாடினார்கள்.என் பாட்டனார் உரைவேந்தரின் நண்பர்கள் மாணவர்கள் எல்லோருக்கும் எந்தையாரை வந்து அந்நாள்களில் தலைமைச் செயலகத்திலேயே சந்திப்பது என்பது பெரும்பேறாகக் கருதினார்கள்.அவ்வண்ணம் மதுரையில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 50
Tag: ArulNatarjan
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 49
“பார்த்திபன் கனவும் துணிவும்” உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அரங்கத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பேசி முடித்து அமர்ந்திருந்தபொழுது, புதுமுகமான நல்லிளைஞர் ஒருவர் என் தோளைத் தட்டி ‘வாருங்கள், ஸ்டெல்லா மாரீசு மகளிர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழாப் போட்டிக்குச் செல்லலாம்’ என்று தன்னுடைய நண்பரின் சீருந்தில் அழைத்துச் சென்றார்.அறிமுகமே இல்லாத திருமுகம் அவர். நேர்த்தியான உடலமைப்பு, பம்பரம் போல் சுழலும் விழிகள், கற்பூரம் போல் பற்றிக் கொள்ளும் நட்புக் கேண்மை. சிரித்துக் கொண்டே என் பெயர் பார்த்திபன் என்றார்.நான் உடனே பேராசிரியர்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 49
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 47
“அரும்பெறல் மரபின் பெரும் பெயர்” பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன்.கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அறியாத எனக்கு, இதுகாறும் இரு முறையோ, மும் முறையோதான் கிராமியச் சூழல் என்றால் என்ன என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.19.05.1976-இல் நான்காம் வகுப்பு பயிலும்பொழுது என்னுடைய சின்னப் பாட்டி ஞானாம்பாள் (பாட்டி லோகாம்பாளின் தங்கை) – சுந்தரமூர்த்திப் பிள்ளை இணையரின் இளைய பிள்ளை வழக்கறிஞர் செல்வத்தரசு – ஆங்கிலப் பேராசிரியர் கயற்கண்ணி (அத்தை பாலகுஜம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 47
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 48
“அரும்பெறல் மரபின் பெரும் பெயர்” பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன்.கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அறியாத எனக்கு, இதுகாறும் இரு முறையோ, மும் முறையோதான் கிராமியச் சூழல் என்றால் என்ன என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.19.05.1976-இல் நான்காம் வகுப்பு பயிலும்பொழுது என்னுடைய சின்னப் பாட்டி ஞானாம்பாள் (பாட்டி லோகாம்பாளின் தங்கை) – சுந்தரமூர்த்திப் பிள்ளை இணையரின் இளைய பிள்ளை வழக்கறிஞர் செல்வத்தரசு – ஆங்கிலப் பேராசிரியர் கயற்கண்ணி (அத்தை பாலகுஜம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 48
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 17
தமிழியற் கல்வியும் – கற்பித்தலும்தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பது பாரதியார் கனவுகளில் ஒன்று .பாரதியாரின் நினைவு நூற்றாண்டும் – கப்பலோட்டிய தமிழர் வ உ சி யின் 150 ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் இத்திங்களிலேயே அமைகின்றன .காலப்போக்கில் சான்றோர் பெருமக்கள் கண்ட கனவுகள் எல்லாம் மெல்ல மெல்ல நிறைவேறுகின்றன .எங்கும் தமிழ் உணர்ச்சிஎதிலும் தமிழ் வளர்ச்சிஎன்ற எழுச்சிப் போக்கை நாம் வரவேற்று மகிழலாம் .நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 17
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 46
“தமிழ்ப்பேச்சும் – தடந்தோள் வீச்சும்” நீங்கள் முனைந்தால் ஊடகத் துறையிலோ, வேறு பிரிவிலோ நுழைவுத்தேர்வு எழுதி ஆட்சித்துறையிலோ, திரைப்படத் துறையிலோ பணியாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்று தொடர்ந்து சொல்லி வந்தார்கள்.என்னை அரிமாக் குருளையர் இயக்கத்தில் இணைத்த நண்பர் சிவகுமாரை நான் என்றும் மறவேன்.அவருடைய அறிமுகத்தால் எனக்குப் பல்வேறு வாய்ப்புகள் குவிந்து, அனுபவங்களில் தோய்ந்து, தலைமையை நோக்கி விரைந்து முன்னேறுவதற்கு அடித்தளம் கிடைக்கப் பெற்றது எந்தையார், சிவகுமாரை அப்பொழுதே பெருமிதமாக நீ ஒரு ‘Lateral Thinker’… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 46
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 45
“எண்ணிப் பார்த்து ஏற்றம் பெறுக” என் வலது காலின் தசைப்பகுதியில் காயம்பட்ட ஒரு வடு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக உள்ளது.அவ்வடுவைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒரு நிகழ்வு நெஞ்சை நெருடும்.நான் நான்காம் வகுப்புப் (1976) பயிலும்பொழுது, மாலைவேளைகளில், கிரிக்கெட் மட்டையும் ஓட்டமுமாக இருப்பது வழக்கம்.விளையாட்டுத் திடலிலிருந்து அண்ணாநகர் இல்லத்திற்கு வேகமாக வந்து எங்கள் வீட்டின் மதிற்சுவரைத் தாண்டுவதுபோலப் பாய்ந்து தாவிக் குதிக்கும் முன், பாதி சுவருடன் நானும் தரையில் விழுந்தேன்.விழுந்த வேகத்தில், எழமுடியாமல் தத்தளித்தேன். அப்பொழுது உதவிக் கரம் நீட்டி… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 45
தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை
தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை விளக்கக் குறிப்பு-மானியக் கோரிக்கை எண்:46தமிழக சட்டப்பேரவை_31.8.2021தங்கம் தென்னரசு.தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு,தொல்லியல் துறை அமைச்சர்முன்னுரைமொழியே மனிதனை இணைத்தது.வேட்டையாடித் திரிந்தவனை வேளாண்மைக்கு அழைத்தது.மொழியால் இதழ்கள் மட்டும் அசையவில்லை. இதயங்களும் – உள்ளங்களும் இசைந்தன.மொழிகள் மனிதனின் உணர்வுகளைப் பாதுகாக்கவும் நிலைப்படுத்தவும் உதவின.வாலில்லாத குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே இருக்கும்மரபுக்கூறு. மாற்றத்தில் 0.1 சதவிகிதம் மட்டுமே மனிதன்.விரிவாகப் பேசுவதற்கும். விளக்கமாக உரைப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்று மானுடவியல் வல்லுநர்கள் முன்மொழிகிறார்கள்.குரல்வளை, தொண்டை நாக்குப்… Continue reading தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 44
“நம்பி வழங்கிய நன்கொடை” சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் ஏழாண்டுகள் படித்ததும், வெவ்வேறு பாடங்களைப் பல்வேறு வகுப்புகளாக காலை முதல் மாலை வரை (9.45-10.30- முதல் பாடவேளை; 10.30-11.15- இரண்டாம் பாடவேளை; 11.15-11.30- இடைவேளை; 11.30-12.15- மூன்றாம் பாடவேளை; 12.15-1.00 – நான்காம் பாடவேளை; 1.00-1.30 – உணவு இடைவேளை; 1.30-1.45 – நன்னெறிப் பாடவகுப்பு; 1.45-2.30 – ஐந்தாம் பாடவேளை; 2.30-3.15 – ஆறாம் பாடவேளை; 3.15-3.20 – இடைவேளை; 3.20-4.05 – ஏழாம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 44
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43
“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!” சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வு நெருங்கி வந்த அந்த நேரத்தில் எங்கள் அண்ணாநகர் இல்லம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாகவே எங்கள் வீடு பொதுவரங்கம் நடப்பது போலத்தான் இயங்கும்.அப்போது என் தந்தையார் தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மூதறிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் எனப் பல நிலையினரைக் கண்டு அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மேலும் அன்றைய… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43