அருளின் குரல் வரிகள்-06

குயில் மேலும் கூறுகிறது. என் நா தழுதழுக்கிறது. வார்த்தைகள் நடுங்குகின்றன. மனம் பதறுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்டால், என் நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்வீர்கள் நீங்கள். என் நண்பரே, என் சிந்தனைக் காட்சி சிறிதும் புரியவில்லையா? காதலுக்காக கதறுகிறேன். கண்ணீர் விடுகிறேன். இல்லையேல் என் சாதலைக் காண தவிக்கிறேன் என்று குயில் கூற, துணுக்குற்றது கவிஞர் மனம்.நான் உனக்கு காதலனா? சின்னக் குயிலின் மதுர மொழியில் உள்ளம் கவர்ந்தவராய் உரைக்கப்பட்டதால் உள்ளமும், உயிரும் உருகி நிற்க பேச்சின்றி சிலையானார்.குயில்… Continue reading அருளின் குரல் வரிகள்-06

அருளின் குரல் வரிகள்-05

 அந்த சோலைக் குயில் தன் சோகக் கதையை சொல்லத் தொடங்குகிறது. என் மானத்திற்கு ஏற்பட்ட சோதனையையும், துன்பத்தையும் பார்க்காமல் உண்மை முழுவதையும் சொல்லி விடுகிறேன்.  உயர் குலத்தோரே கேளுங்கள்.  நானும் பெண் என்பதால் நான் கூற இருப்பதை சிறிது மனமிறங்கி செவி மடுப்பீர்.  இந்த உலகில், உருவத்திலும் அறிவிலும் சிறிய வடிவிலான பறவையாக நான் பிறந்திருந்தாலும், இறைவன் அருளாலோ அல்லது தேவர்களின் கோபத்தினாலோ நான் அனைத்து உயிர்களின் மொழிகளையும் புரிந்துகொள்ளும் சக்தி பெற்றேன்.  மனிதர்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும்… Continue reading அருளின் குரல் வரிகள்-05

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-16

ஊர்கூடித் தேரிழுக்க ஒன்றாக இணைவோம்..! சென்ற வாரம் என் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னை வினவினார்.உலகில் பிறமொழிச் சொற்கள் கலக்காத மொழி ஏதுமில்லை. சீனம் பிறமொழிச் சொற்களை ஏற்பதில்லை என்பது முற்றிலும் சரியான கருத்து அல்ல. கம்பன் பயன்படுத்திய ஐயோ என்ற சொல் இன்றும் அதே பொருளில் சீனத்தில் வழக்கிலுள்ளது. மலாய் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன (எ-டு: கடை) பிற மொழிகள் தமிழ்ச் சொற்களை ஏற்கும்போது பெருமிதம் கொள்ளும் நாம், தமிழ் பிற… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-16

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 12

காலமும் கருத்தும் சிந்தனையாளர்கள் பிறந்த நாளிலிருந்து வளர வளரத் தமது போக்கிலும் – நோக்கிலும் மாறுபாடு காண்பார்கள் .அரசியல் வாணர்கள் தாம் கட்சி மாறுவதாலும் தமக்கு அமையும் தலைமையைப் பொறுத்து தமது கோட்பாடுகளை வேறு வகையில் அமைத்துக் கொள்வதும் இயப்பு .இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் வாழ்வு முழுவதும் எழுதிய கதை ,கட்டுரைத் தொகுதிகள் தொகையாக வெளியிடப்பெறுகின்றன .தொடக்கத்திலிருந்து பார்த்தால் ஆசிரியர் ஆசிரியர் தம் மனங்களை எவ்வெக் காலங்களில் மாற்றிக் கொண்டனர் என்பதைக் காணலாம் .இதனால் தான் முந்தைய… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 12

அருளின் குரல் வரிகள்-04

மாங்குயிலுக்கு தீங்குரல் தந்த மாமணி! இசை வாணர் சூர்ய பிரகாஷின் இசை மழை மிக உன்னதமான மாமழையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக பாரதியாரி..ன் உயிர்ப் பாட்டான குயில் பாட்டை ஊன் உருக அவர் இசைத்துக் காட்டியிருக்கிறார். அலைபுரளக் கரை புரள இராகங்கள் அவர் குரலில், வழிந்தன. இது குறித்து, உலகிலிருந்து பல்வேறு பெருமக்கள் எல்லாம் என்னை அழைத்து குயில் பாட்டை இப்படி உருக்கமாக பாடுகிறாரே, கலைமாமணி சூர்ய பிரகாஷ், அவரை என்னென்று புகழ்வது? என்னென்று… Continue reading அருளின் குரல் வரிகள்-04

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-15

செழும் தொன்மையும் மரபும் செழிந்த செம்மொழி..! ================================================= கலப்பினால் தமிழில் வழக்கிழந்த சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். சான்றாக, அகநாழிகை அல்லது உண் ணாழிகை கர்ப்பக்கிருகம் நாளங்காடி (பகற்கடை) அல்லங்காடி (மாலைக்கடை) அடுத்துண் (தீவனத்திற்கு விட்ட நிலம்) அடைய வளைந்தான் (கோயிலின் புறச்சுற்று) மதில் (அணல் தாடி) அணிகம் (வாகனம்) அணியம் (ஆயத்தம்) அணுக்கன் திருவாயில் (கர்ப்பக்கிருகவாயில்) இட்டேற்றம் (பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை) இதழ்குவி பா (ஒட்டியம்) இதழகல் பா (நிரோட்டகம்) இரப்போன் (பிச்சைக்காரன்) இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்)… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-15

அருளின் குரல் வரிகள்-03

பாரதியின் குயில் பாட்டு ========================== பெருமக்களே, குயில்பாட்டின் இரண்டாம் இயல்  தொடங்கியது. மிக அற்புதமாக நம்முடைய கலைமாமணி சூர்யபிரகாஷ்  தொடக்கத்திலிருந்து இதை மிக அழகாக “காதல், காதல், காதல் அது போயின் சாதல், சாதல், சாதல்” என்று அந்த வரிகள்தான் இப்போது இந்தப் பாடலினுடைய உயிராக அமைகிறது.  இந்த வரிகள் வைர வரிகள்; சாதனை வரிகள்; கல்வெட்டு வரிகள்.  சாசன வரிகள், இளையோரின்  இதய கீதம். உலகெங்கும் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த தேன் வரிகள். இந்த வரிகளைப்… Continue reading அருளின் குரல் வரிகள்-03

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-14

தனித்தமிழியக்கம்..! இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்மொழித் தூய்மையை நிலைநிறுத்தும் தனித்தமிழியக்கம் தோன்றியது. அவ்வியக்கம் மனோன்மணீயம், சீவகன், புருடோத்தமன், குடிலன், சகடன் என்ற பெயர்கள் வடமொழிப் பெயரின என்றாலும் வடமொழியினும் தமிழே உயர்ந்தது, சதுர்மறை ஆரியம் வருமுன் சகம் முழுவதும் நினதே என்றும், கனம் சடை என்று உருவேற்றிக் கதறுவரோ என்றும் வடமொழி எதிர்ப்பு வளர்ச் சியை வேரூன்றச் செய்த முதன்மைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையைச் சாரும். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் முதலியோருடைய ஊக்கமும் இந்நல்லுணர்வுக்கு ஆக்கம் தந்தன. பிறமொழிச்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-14

அருளின் குரல் வரிகள்-02

பாரதியின் குயில் பாட்டு ===================== கற்பனையும், கதையுமாக எழுதப்பட்ட கவிதைப் பகுதி இது.  கதையின் துவக்கமாக அதன் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், முதலில் இக்கதையின் கதாநாயகியான குயிலி, குயிலைப் பற்றிக் கூறுகிறாள். அவர் காட்டும் முதல் காட்சி, ஒரு மாஞ்சோலை என்றும், வேடர்கள் வந்து பறவைகளைச் சுடும் ஒரு சோலை என்றும், வேடர் வராத ஒரு நாள் என ஒரு திகல் கதையைப் போல தொடங்குகிறார். பெண் குயிலொன்று, கிளையில் அமர்ந்துள்ளது.  அதைப்பார்த்து, பரவசமுற்று பல ஆண்… Continue reading அருளின் குரல் வரிகள்-02

கடிதம் -அருள்

அன்பு அருள் நலம், நலம் காண ஆவல். எனது மைத்துனர் டாக்டர் அவ்வை நடராஜன், அவரது கல்விப்பணியில், அவர் ஆற்றிய பணிகள் குறித்த விவரங்கள் யாராலோ, எப்போதோ தயாரிக்கப்பட்டு வரவேற்பு உரை நகல் ஒன்று என்னிடம் உள்ளது. அதன் நகல் ஒன்று தங்கள் தகவலுக்கு இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.என்னுடைய வணக்கங்களை டாக்டர் அவ்வை அவர்களுக்கு தெரிவியுங்கள். தங்கள் அன்புடன்,என். வி. நரசிம்மன். தாமரைத்திரு முனைவர் ஒளவை நடராசன் டாக்டர் ஒளவை நடராசன் ஏறத்தாழ 60 ஆண்டுகளாகத் தமிழகத்தின்… Continue reading கடிதம் -அருள்