செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 16

செயலில் செம்மையை வளர்ப்போம் !” கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு ! “என்று மூதறிஞர் வ சுப மா மனமுருகிப்பாடிய வள்ளல் அழகப்பரால் தான் இன்று காரைக்குடி பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் அவரே வேர் என்றால் அது மிகையில்லை .காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றியதோடு, ஒன்றிய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 16

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15

காலப்பேழையைத் திறந்த கலைஞர் திறம் !பச்சையப்பர் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த நிறைவாண்டில் 1957-58 இல் நாள் நிகழ்ச்சிக்குறிப்பில் வரலாற்றுப்பண்பாட்டுப் பேரறிஞர் தாயன்பி உரையாற்றுவார் என்றிருந்தது .மயிலையில் சாஸ்திரி அரங்கில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. எண்ணினால் எழுபதுபேர்வந்திருப்பார்கள்.அவ்வளவுபேருமவரலாற்றுத்துறைப்பேராசிரியர்கள் ,அறிஞர்கள் ,இதழாளர்கள் என்று அவை நிரம்பி வழிந்தது . அணிந்தபடி ஒருவர் விரைந்து வந்தார் .அவர் தான் அறிஞர் தெ பொ மீ ,அறிஞர் பெ நா அப்புசாமி எழுந்து நின்று அவருக்கு இடம் தந்து விட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-17

அரியணை மொழியே அனைவரையும் ஈர்த்தது..! =================================================  ‘ஊர் கூடித் தேர் இழுப்போம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு தனித்தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் பா.இறையரசன் எனக்கு எழுதிய மடல் சிந்திக்கத்தக்கது.    “தமிழறிஞர்கள், அறிவியலாளர்கள், மொழியியல் அறிஞர்கள், பன்மொழி ஆற்றல் பெற்றவர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் எனப்பலரும் சேர்ந்து ஊர் கூடித் தேர் இழுத்தால் உண்டு நன்மை. ஆங்கிலம் தன்னை    வளர்த்துக்  கொள்ள  பிறமொழிச் சொற்களைப் பெற்று- தன்னில் கலப்படம் செய்து வளர்ந்தது பொருந்துமா என்று ஆய வேண்டும்.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-17

அருளின் குரல் வரிகள்-05

 அந்த சோலைக் குயில் தன் சோகக் கதையை சொல்லத் தொடங்குகிறது. என் மானத்திற்கு ஏற்பட்ட சோதனையையும், துன்பத்தையும் பார்க்காமல் உண்மை முழுவதையும் சொல்லி விடுகிறேன்.  உயர் குலத்தோரே கேளுங்கள்.  நானும் பெண் என்பதால் நான் கூற இருப்பதை சிறிது மனமிறங்கி செவி மடுப்பீர்.  இந்த உலகில், உருவத்திலும் அறிவிலும் சிறிய வடிவிலான பறவையாக நான் பிறந்திருந்தாலும், இறைவன் அருளாலோ அல்லது தேவர்களின் கோபத்தினாலோ நான் அனைத்து உயிர்களின் மொழிகளையும் புரிந்துகொள்ளும் சக்தி பெற்றேன்.  மனிதர்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும்… Continue reading அருளின் குரல் வரிகள்-05

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 12

காலமும் கருத்தும் சிந்தனையாளர்கள் பிறந்த நாளிலிருந்து வளர வளரத் தமது போக்கிலும் – நோக்கிலும் மாறுபாடு காண்பார்கள் .அரசியல் வாணர்கள் தாம் கட்சி மாறுவதாலும் தமக்கு அமையும் தலைமையைப் பொறுத்து தமது கோட்பாடுகளை வேறு வகையில் அமைத்துக் கொள்வதும் இயப்பு .இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் வாழ்வு முழுவதும் எழுதிய கதை ,கட்டுரைத் தொகுதிகள் தொகையாக வெளியிடப்பெறுகின்றன .தொடக்கத்திலிருந்து பார்த்தால் ஆசிரியர் ஆசிரியர் தம் மனங்களை எவ்வெக் காலங்களில் மாற்றிக் கொண்டனர் என்பதைக் காணலாம் .இதனால் தான் முந்தைய… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 12

அருளின் குரல் வரிகள்-04

மாங்குயிலுக்கு தீங்குரல் தந்த மாமணி! இசை வாணர் சூர்ய பிரகாஷின் இசை மழை மிக உன்னதமான மாமழையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக பாரதியாரி..ன் உயிர்ப் பாட்டான குயில் பாட்டை ஊன் உருக அவர் இசைத்துக் காட்டியிருக்கிறார். அலைபுரளக் கரை புரள இராகங்கள் அவர் குரலில், வழிந்தன. இது குறித்து, உலகிலிருந்து பல்வேறு பெருமக்கள் எல்லாம் என்னை அழைத்து குயில் பாட்டை இப்படி உருக்கமாக பாடுகிறாரே, கலைமாமணி சூர்ய பிரகாஷ், அவரை என்னென்று புகழ்வது? என்னென்று… Continue reading அருளின் குரல் வரிகள்-04

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-14

தனித்தமிழியக்கம்..! இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்மொழித் தூய்மையை நிலைநிறுத்தும் தனித்தமிழியக்கம் தோன்றியது. அவ்வியக்கம் மனோன்மணீயம், சீவகன், புருடோத்தமன், குடிலன், சகடன் என்ற பெயர்கள் வடமொழிப் பெயரின என்றாலும் வடமொழியினும் தமிழே உயர்ந்தது, சதுர்மறை ஆரியம் வருமுன் சகம் முழுவதும் நினதே என்றும், கனம் சடை என்று உருவேற்றிக் கதறுவரோ என்றும் வடமொழி எதிர்ப்பு வளர்ச் சியை வேரூன்றச் செய்த முதன்மைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையைச் சாரும். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் முதலியோருடைய ஊக்கமும் இந்நல்லுணர்வுக்கு ஆக்கம் தந்தன. பிறமொழிச்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-14

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13

மணியும் பவளமும் விரவிய மாய மாலை..! ================================================= உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார். 1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது. 2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13