பெருமக்களே!முன்னொரு பிறவியிலேயே நீ ஒரு அழகிய பெண்ணாக வேடர் தலைவன் மகளாக பிறந்து இருந்தாய் அல்லவா!ஒரு நாள் மாலை சின்ன குயிலாகிய நீயும் உன் தோழிகளும் மின்னல் கொடிகளாய் ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டே இருந்தீர்கள்.உன்னையே நினைத்து இயங்கிக் கொண்டிருக்கும் உன் மாமன் மகன் மாடன் உன்னை மணந்து கொள்வோம் என்ற கனவுலகில் தேன்மழை நாட்டு வேடன் மகன் நெட்டைக் குரங்கன் நேராக நின்று தந்தையை மிரட்டி உன் மனம் பற்றி நினையாமல் மனம் நிச்சயித்து சென்றுள்ளான்.இவர்… Continue reading அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு -20
Tag: kuyilpaatu
அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 15
சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார்.இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா?குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள்.குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணிசூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக செய்து… Continue reading அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 15
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 13
பெருமக்களே…குயில் காளையிடம் மேலும் கூறுவதைக் கவிஞர் தொடர்கிறார்.காளையே ! நான் உன் முதுகில் அமர்ந்திருக்கையில் வாலைத்தூக்கி என்னை அடித்தாலும் நீ என்னை அணைப்பதாக அகமகிழ்வேன்;நீ ‘மா என ஒலி எழுப்புகையில் நானும் உன்னுடன் சேர்ந்து குரலெழுப்பி, குதூகலமடைவேன்;உன் உடலின் மேல் படிந்திருக்கும் உண்ணிகளை உனக்கு வலி ஏற்படாது எடுத்து கொன்று விடுவேன்.காடெல்லாம் அலைந்து, வயல்வெளி எங்கும் சுற்றி வந்தபின், பசித்து உணவு உண்டு அமர்ந்து அசைபோடுவாயே: அப்போது நாம் உன் பக்கத்தில் அமர்ந்து நீ ரசிக்கும்படியான கதைகள்… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 13
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 09
பெருமக்களே…கரைபுரள அலைபுரள நம்முடைய நண்பர் கலைமாமணி சூரிய பிரகாஷ் பாடிக் காட்டுகின்ற குயில் பாட்டு மகோன்னதமான வரவேற்பை உலகெங்கும் பெற்றுவருகிறது.பார்க்கும் நண்பர்களெல்லாம் யூடியூபில் குயில் பாட்டைக் கேட்டுக் கேட்டு இன்புறுவதும் லண்டன் மாநகரத்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், சுவிட்சர்லாந்திலிருந்தும் கனடாவிலிருந்தும் பெரிய ஆர்வலர்கள் கூட்டம் எங்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. குயில்பாட்டு பாரதியாருடைய சிறந்த இலக்கியப் படைப்பாகும். பாரதியாருடைய தலைசிறந்த மூன்று படைப்புகள் எது என்று கேட்டபொழுது சொன்னார்களாம் தேசிய உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது பாஞ்சாலி சபதம் என்றும், தெய்வீக உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 09
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 08
அன்பார்ந்த பெருமக்களே … குயில் கூவிக் கொண்டே இருக்கிறது. குயில் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் அங்கிங்கெனாதபடி குயில் பாட்டைக் கேட்டுக் கேட்டு இன்புற்று கலைமாமணி சூரியபிரகாஷை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். பாரதி வரிகளை நாங்கள் எத்தனையோ முறை படித்திருந்தாலும் குயில் பாட்டை இசைப் பாட்டாக அற்புதமாகப் பாடிக் காட்டுகின்ற கலைமாமணி சூரியபிரகாஷை நாங்களெல்லாம் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்றார்கள். நண்பர்களே ! இலண்டன் மாநகரைச் சேர்ந்த கவிஞர் கருணானந்தராஜா குயில் பாட்டில் தத்துவ ரகசியங்கள்… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 08
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-07
ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம். அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல் சென்று விட்டதாம். இதுதான் நான் சென்ற வாரம் பேசிய பாடுபொருளாகும். எங்கே போனதாம்? தெரியவில்லை. எப்படிப் போனதாம்? புரியவில்லை. அந்தக் குட்டிப் பிசாசுக் குயிலைக் காணவில்லையே என்று ஏங்குகின்ற தருணத்தில், அந்தப்பாடலை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் அவர்கள் அதை எவ்வளவு அழகாகப் பாடிக் காட்ட முடியுமோ பாடி உலகெல்லாம் உள்ள… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-07
அருளின் குரல் வரிகள்-06
குயில் மேலும் கூறுகிறது. என் நா தழுதழுக்கிறது. வார்த்தைகள் நடுங்குகின்றன. மனம் பதறுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்டால், என் நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்வீர்கள் நீங்கள். என் நண்பரே, என் சிந்தனைக் காட்சி சிறிதும் புரியவில்லையா? காதலுக்காக கதறுகிறேன். கண்ணீர் விடுகிறேன். இல்லையேல் என் சாதலைக் காண தவிக்கிறேன் என்று குயில் கூற, துணுக்குற்றது கவிஞர் மனம்.நான் உனக்கு காதலனா? சின்னக் குயிலின் மதுர மொழியில் உள்ளம் கவர்ந்தவராய் உரைக்கப்பட்டதால் உள்ளமும், உயிரும் உருகி நிற்க பேச்சின்றி சிலையானார்.குயில்… Continue reading அருளின் குரல் வரிகள்-06
அருளின் குரல் வரிகள்-05
அந்த சோலைக் குயில் தன் சோகக் கதையை சொல்லத் தொடங்குகிறது. என் மானத்திற்கு ஏற்பட்ட சோதனையையும், துன்பத்தையும் பார்க்காமல் உண்மை முழுவதையும் சொல்லி விடுகிறேன். உயர் குலத்தோரே கேளுங்கள். நானும் பெண் என்பதால் நான் கூற இருப்பதை சிறிது மனமிறங்கி செவி மடுப்பீர். இந்த உலகில், உருவத்திலும் அறிவிலும் சிறிய வடிவிலான பறவையாக நான் பிறந்திருந்தாலும், இறைவன் அருளாலோ அல்லது தேவர்களின் கோபத்தினாலோ நான் அனைத்து உயிர்களின் மொழிகளையும் புரிந்துகொள்ளும் சக்தி பெற்றேன். மனிதர்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும்… Continue reading அருளின் குரல் வரிகள்-05
அருளின் குரல் வரிகள்-04
மாங்குயிலுக்கு தீங்குரல் தந்த மாமணி! இசை வாணர் சூர்ய பிரகாஷின் இசை மழை மிக உன்னதமான மாமழையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக பாரதியாரி..ன் உயிர்ப் பாட்டான குயில் பாட்டை ஊன் உருக அவர் இசைத்துக் காட்டியிருக்கிறார். அலைபுரளக் கரை புரள இராகங்கள் அவர் குரலில், வழிந்தன. இது குறித்து, உலகிலிருந்து பல்வேறு பெருமக்கள் எல்லாம் என்னை அழைத்து குயில் பாட்டை இப்படி உருக்கமாக பாடுகிறாரே, கலைமாமணி சூர்ய பிரகாஷ், அவரை என்னென்று புகழ்வது? என்னென்று… Continue reading அருளின் குரல் வரிகள்-04
அருளின் குரல் வரிகள்-03
பாரதியின் குயில் பாட்டு ========================== பெருமக்களே, குயில்பாட்டின் இரண்டாம் இயல் தொடங்கியது. மிக அற்புதமாக நம்முடைய கலைமாமணி சூர்யபிரகாஷ் தொடக்கத்திலிருந்து இதை மிக அழகாக “காதல், காதல், காதல் அது போயின் சாதல், சாதல், சாதல்” என்று அந்த வரிகள்தான் இப்போது இந்தப் பாடலினுடைய உயிராக அமைகிறது. இந்த வரிகள் வைர வரிகள்; சாதனை வரிகள்; கல்வெட்டு வரிகள். சாசன வரிகள், இளையோரின் இதய கீதம். உலகெங்கும் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த தேன் வரிகள். இந்த வரிகளைப்… Continue reading அருளின் குரல் வரிகள்-03