வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு…………………………………………………………..இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், நெடுங்காலம் வரையில் படிப்படியாகக் கலப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எழுத்து வழக்கற்ற பேச்சு மொழியாக ஒன்றும், மற்றொன்று பேச்சு வழக்கற்ற எழுத்து மொழியாகவும், இருப்பின், முன்னது விரைவில் மாறும் புதுமொழியாக உருப்பெறும்.ஒன்று எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழியாகவும், மற்றொன்று பேச்சு வழக்கு அற்ற மொழியாகவும் இருப்பின், முன்னது… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-20
Tag: ArulNatarjan
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-19
எல்லா நிலைகளிலும் சார்பின்றி வாழ எழுச்சி பெறுவோம் சென்றவாரம் என் கட்டுரையப் படித்தவுடன், என் நெருங்கிய உறவினர் திரு.மதனகோபால் எனக்கு எழுதிய குறிப்புரையை நான் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.இளம் சிறார்களுக்குப் பெற்றோர்களுக்கும்அதாவது மழலையர் பள்ளி உயர்நிலை பள்ளி ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருவது கண்கூடு அதில் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலக்கவும் சிறு எடுத்துக்காட்டாக uniform முதல் rubber வரை ஆங்கிலம் பெருமளவில் தமிழில் எல்லா இடத்திலும் கலந்து உள்ளது ஆங்கிலச் சொற்களோடு இணைத்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-19
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-18
கலப்பு மொழி கன்னல் மொழியாகக் காட்சியளிக்கிறதே..! கல்விக்கூடங்களில்…கல்விக்கூடங்கள் ஆங்கிலேயர் காலத்தில் வரையறுக்கப்பட்ட கல்வி முறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றன. ஆங்கிலம் பயிற்று மொழியாகவே (Medium of Instruction) எங்கும் எளிதில் உள்ளதென்றால் மிகையாகாது. ஏறத்தாழ இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்த நிலைதான். ஆங்கில ஆட்சிக்கு அகப்பட்ட நாடுகள் அனைத்திலும் இந்த அவலம் உண்டு.தமிழ்நாட்டில் ஆங்கிலத்தின் வாயிலாகப் பாடங்களைக் கற்பிக்கும் வகுப்புக்குச் செல்வாக்கு மிகுதியாக உள்ளது. ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள வகுப்பிலே பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் இந்நாட்டில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-18
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-16
ஊர்கூடித் தேரிழுக்க ஒன்றாக இணைவோம்..! சென்ற வாரம் என் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னை வினவினார்.உலகில் பிறமொழிச் சொற்கள் கலக்காத மொழி ஏதுமில்லை. சீனம் பிறமொழிச் சொற்களை ஏற்பதில்லை என்பது முற்றிலும் சரியான கருத்து அல்ல. கம்பன் பயன்படுத்திய ஐயோ என்ற சொல் இன்றும் அதே பொருளில் சீனத்தில் வழக்கிலுள்ளது. மலாய் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன (எ-டு: கடை) பிற மொழிகள் தமிழ்ச் சொற்களை ஏற்கும்போது பெருமிதம் கொள்ளும் நாம், தமிழ் பிற… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-16
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-15
செழும் தொன்மையும் மரபும் செழிந்த செம்மொழி..! ================================================= கலப்பினால் தமிழில் வழக்கிழந்த சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். சான்றாக, அகநாழிகை அல்லது உண் ணாழிகை கர்ப்பக்கிருகம் நாளங்காடி (பகற்கடை) அல்லங்காடி (மாலைக்கடை) அடுத்துண் (தீவனத்திற்கு விட்ட நிலம்) அடைய வளைந்தான் (கோயிலின் புறச்சுற்று) மதில் (அணல் தாடி) அணிகம் (வாகனம்) அணியம் (ஆயத்தம்) அணுக்கன் திருவாயில் (கர்ப்பக்கிருகவாயில்) இட்டேற்றம் (பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை) இதழ்குவி பா (ஒட்டியம்) இதழகல் பா (நிரோட்டகம்) இரப்போன் (பிச்சைக்காரன்) இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்)… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-15
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13
மணியும் பவளமும் விரவிய மாய மாலை..! ================================================= உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார். 1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது. 2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11
தமிழ் வளர்க்கும் ஆர்வம்கலை இலக்கிய வரலாற்று வடிவங்களில் தீராக் காதலும் – செழுமையான திறமையும் இளமை தொட்டே முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நாடி நரம்புகளில் தோய்ந்தமைந்தன .நம் கலைஞருக்கு அறிவியல் மனமும் ஆர்வமும் அதே அளவுக்கு உண்டு .பொறியியலில் ,கட்டடவியலில் கோட்டோவியம் வரைவதில் அவருக்கு ஆற்றல் பொங்கி இருந்தது . வள்ளுவர் கோட்ட வரைவு வடிவை அவர் வரைந்து காட்டியதும் , ஆழித்தேர் அமைப்பைக் குறிப்பிட்டுத் திருத்தியதையும் தென் குமரித் திருவள்ளுவர் சிலையின் பரப்பளவை நுண்மையாகக் கேட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 8
பூந்தோட்டத்தைப் பொலிவாக்குவோம் ! இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மாநில மக்களுக்கு இயல்பாக மடங்கியிருந்த மொழி ,இனம் ,இலக்கியம் ,பண்பாடு ,வரலாறு ,முதலிய துறைகளில் பெருமிதமும் – பேரன்பும் எழலாயின .வங்கத்தில் பொங்கிப் பெருகியிருந்த இலக்கிய வேட்கையைப்போல இன ,மான ,எளியோர் நலம் நாடிய தன்மான இயக்கச் சிந்தனைத் தழல் போலத் தமிழ்நாட்டு இளைஞர் மனத்தில் எழுந்தது .தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா – முத்தமிழ்க்கலைஞரின் சீர்திருத்தச் சிந்தனைகள் புதிய விழிப்பையும் – ஆர்வத்தையும் பெருக்கின .… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 8
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4
மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்ததே..! மொழிக்கலப்பின் தொன்மை ஒரு மொழியின் கூறுகளான பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய இரண்டிலும் மொழிக்கலப்பு நேர்கின்றது. ‘மனிதன் தன் சிந்தனை’த் திறத்தால் புதியன கண்டு, கேட்டு, அமைத்துப் போற்றிடும் சிறந்த நாகரிகக் கூறாக மொழி உருவெடுக்கின்றது. எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆகிய எல்லாவற்றையும் கடந்து மொழியை மாந்தன் தன் சிந்தனையால், உறவுத்தொடர்பால் எப்படியோ வளர்த்துக் காத்து வந்திருக்கிறான் என்பது வியப்பைத் தருவதாகும். இவ்வாறு காக்கப்படும் மொழி யின்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3
மொழியே இணைப்புப் பாலம்..! மொழிக் கலப்பு மொழித் திறன் என்பது நாட்டு மக்கள் வளர்த்துக் காக்கும் திறனுடைமையின் பயனாகும். ஒருவருக்கொருவர் உரையாடி மகிழும் மொழியே மக்களின் அறிவுப் பெருக்கத்தால் செழுமையான மொழியாக மாறும் பல இன, மொழி மக்களின் இயக்கமாக உலகம் உள்ளது. மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முதலில் உணர்வைச் சிறுசிறு சொற்கள் கொண்ட மொழியாகத் தன்னைப் போல் அவற்றை அறிந்தவரிடம் உரையாடுகிறான். தனி ஒரு மனிதனின் தேவை என்ற நிலையிலிருந்து அவன்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3