சுவாமி விவேகானந்தர் கதைகள் – பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!சுவாமி விவேகானந்தர் அமெரிக்க தேசத்திற்குச் சென்று மிகப்பிரபலமடைந்து பெரும் புகழையும் பெற்றார். 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுவாமிஜி உரை நிகழ்த்தினார். இந்த சொற்பொழிவு அநேகரின் பாராட்டுதல்களைப் பெற்றது பல்கலைக் கழக மாணவர்களுக்கு சுவாமிஜியை மிகவும் பிடித்துப் போயிற்று. கீழைத் தத்துவத் துறை தலைமைப் பதவியை சுவாமிஜிக்கு அளிக்க இப்பல்கலைக்கழகம் முன் வந்தது இது மிகவும் அபூர்வமான விஷயம்.… Continue reading சுவாமி விவேகானந்தர் கதைகள்
Category: Personal Blogging
கண்ணன் கதைகள் – 2
ஈட்டில் “மிளகாழ்வான் வார்த்தை” என்று வருகின்றது. அரசன் ஊர்மக்களுக்கு நிலங்களை தானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்விப் படுகின்றார். அவரும் தானம் பெறச் செல்லுகின்றார்.அவரைப் பார்த்த அரசன் “உமக்கு தானம் கொடுப்பதில்லை’ என்று அரசன் சொல்ல, அது கேட்ட மிளகாழ்வான், “பிரபுவே, எனக்கு மாத்திரம் கொடுக்க முடியாது என்று சொல்லக் காரணம் என்ன? வேதமோ சாத்திரமோ எதில் தேர்வு வைத்தாலும் நான் தேர்வு கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்” என்கிறார்.இதற்கு அரசன் ”உமக்கு அந்த யோக்கியதைகள் இல்லை என்று நான்… Continue reading கண்ணன் கதைகள் – 2
பலத்தை வழங்குபவர் திருமாலே….
பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார்சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால்… Continue reading பலத்தை வழங்குபவர் திருமாலே….
போலி நீங்கினால் சிறந்தவை கிடைக்கும்
ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம்பிடித்தாள்.“இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை” என்றாள் தாய்.?நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி ‘ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்’ மாலை வாங்கி தரசொல்றேன்… இது வேண்டாம்மா” என்றாள் தாய்.?ஆனால் அச் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்…அந்த சிறுமிக்கு… Continue reading போலி நீங்கினால் சிறந்தவை கிடைக்கும்
கண்ணன் கதைகள் – 1
இன்று ஸ்ரீஜெயந்தி. கண்ணன் வசிக்கும் இடங்களில் எனக்குக் கிடைத்த சில கதைகள் இவை.தொட்டமளூர்ஒரு நாள் திடீர் என்று தொட்டமளூர் கிளம்பினேன்.மூலவர் ”அப்ரமேயர்” (‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.) தாயார் அரவிந்தவல்லி. இங்கே இருக்கும் நவநீதகிருஷ்ணன் – குழந்தைக் கண்ணன், சுருட்டைத் தலை மயிர், கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகள், டிரஸ் மட்டும் தான் இல்லை. கையில் வெண்ணெய் உருண்டையுடன் தவழ்ந்து… Continue reading கண்ணன் கதைகள் – 1
மேனேஜ்மெண்ட்
பரபரப்பாக இயங்கும் வங்கியில்இரண்டொரு மாதம் முன்பு – ஒருநாள் அவரை கவனித்தேன்.வெள்ளை வேட்டி. வெள்ளை – தொள தொள – சட்டை. அறுபது வயதிருக்கலாம். ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்த என் அருகில் வந்தமர்ந்தார். கையில் பணமெடுக்கும் ச்செலான். கண்டிப்பாக எழுதித் தரச் சொல்லுவார் என்கிற இறுமாப்புடன் பேனாவில் கை வைத்துத் தயாராய் இருந்தேன். அவர் தன் சட்டையின் மேல் பையிலிருந்து பேனாவை எடுத்தார். நடுங்கும் விரல்களில் ச்செலானில் பெயர், தேதியை எழுதினார். பாஸ் புக்கை சரிபார்த்தபடியே, ஒவ்வொரு… Continue reading மேனேஜ்மெண்ட்
Blast from the Past
Blast from the Past. My School classmate,best friend,prolific writer,Software Professional,Financial Wizard Rtn Saiseshan in his inimitable language penned this note about my family wayback in 2012…….. Arul, Vani and Aathirai Come November 22nd, Arul will be completing a decade in Chenna Patna.I’m sure this will automatically qualify him as an old timer – Ann Vani… Continue reading Blast from the Past
சம்சார சாகரம்
சம்சார சாகரம்’, என்ற பிறவிக் கடலை கடக்க, ‘விஷ்ணு நாமமே கதி… விளக்கும் எளிய கதை. ஒரு சாது எப்பொழுதும் விஷ்ணு நாமமே கதி என நினைத்து ஒரு மரத்தடியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.‘ஐயா! நான் உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்’, என்றது.‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை.… Continue reading சம்சார சாகரம்
அலெக்சாண்டர்
அலெக்சாந்தரின் நாடு மாசிடோன். துவக்கத்தில் மாசிடோனியர்களை கிரேக்கர்களாகவே அக்கால கிரேக்கர்கள் கருதவில்லை. கிரேக்கத்துக்கு வடக்கே இருந்த காட்டுமிராண்டிகளாக தான் கருதினார்கள். காரணம் மாசிடோனியர்களிடம் கலை, அறிவியல், தத்துவம், நகர நாகரிகம் எதுவும் இல்லை. அவர்கள் சும்மா ஆடு மேய்த்துக்கொண்டும், சண்டை, கலவரங்களில் ஈடுபடுக்கொண்டும் இருந்தார்கள்.இந்த சூழலில் பிலிப் மாசிடோன் ஆட்சிக்கு வருகிறார். அவரது நோக்கம் கிரேக்கத்தை ஒன்றிணைத்து ஒரே நாடாக்கி, பொது எதிரியான பாரசிகத்தை வீழ்த்தவேண்டும் என்பதுதான். பாரசிகம் அப்போது மிகப்பெரும் பேரரசு. எகிப்து, துருக்கியில் துவங்கி… Continue reading அலெக்சாண்டர்
தினம் ஒரு பாசுரம் 12-திருப்பாணாழ்வார்
பாசுரம் 12: பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்றுபல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. Paasuram 12: Pallandu endra pavithranai parametiyai saranga yennum villandaan thanai Villiputhur Vitu Chithan virumbia so ,Nallandaan yedru navindru oraipar ,Namo Narayana endru pallandu Paramathmanai choozdu thethuvar , Pallande!