பாசுரம் 5: நம்பினேன்பிறர் நன்பொருள் தன்னையும்நம்பினேன்மட வாரையும் முன்னெல்லாம்செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே. Paasuram 5: nambinEn pirar nan poruL tannaiyumnambinEn maDavAraiyum munnelAm |SemponmADa tirukkuruhoor nambikkuanbanAi aDiyEn SadirtEn inrE
Tag: sujathadesigan
கண்ணன் கதைகள் – 8
பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாக போற்றப்படுகிறது.. ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து, புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.மஹாபிரசாதம் கிடைக்கும் இடத்துக்குச் சென்றேன் – ’ஆனந்த பஜார்’ என்று பெயர். பிரசாதத்தை உண்ணும் முன் அதை எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்க்கலாம்உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பது தான். ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3… Continue reading கண்ணன் கதைகள் – 8
தினம் ஒரு பாசுரம் 4-ஸ்ரீ மதுரகவியாழ்வார்
பாசுரம் 4: நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்புன்மை யாகக் கருதுவ ராதலின்அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்தன்மை யான்சட கோபனென் நம்பியே. Paasuram 4: nanmaiyAl mikka nAn maraiyALarhaLpunmaiyAha karuduvar Adalin |annaiyAi attanAi ennai ANDiDumtanmaiyAn SaDagOpan en nambiyE
கண்ணன் கதைகள் – 7
’வியாக்கியான சக்ரவர்த்தி’ ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தனது உரையில் “அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே” என்று நகைச்சுவையான பதத்தை உபயோகித்துள்ளார்.இதில் என்ன நகைச்சுவை என்று யோசிக்கலாம்.பொதுவாகக் கோயிலில் கோஷ்டி முடிந்த பிறகு தீர்த்த பிரசாதம் கொடுப்பார்கள். அப்போது முதல் தீர்த்தம் இரண்டாம் தீர்த்தம்.. கடைசியில் பெண்களுக்கு என்ற வரிசையில் இருக்கும். விசேஷ காலங்களில் கோயிலில் கூட்டம் அதிகம் என்றால் அர்ச்சகர் சிலருக்கு கொடுத்துவிட்டு ‘சட்’ என்று முடிந்துவிட்டது என்று உள்ளே சென்றுவிடுவார். இதனால் பலருக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால்… Continue reading கண்ணன் கதைகள் – 7
தினம் ஒரு பாசுரம் 3-ஸ்ரீ மதுரகவியாழ்வார்
பாசுரம் 3: திரிதந் தாகிலும் தேவ பிரானுடைகரிய கோலத் திருவுருக் காண்பன்நான்பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே Paasuram3: tiri tandAhilum dEva pirAnuDaikariya kOla tiru uru kANban nAn |periya vaN kuruhoor nahar nambikkALuriyanAi aDiyEn peTTra nanmaiyE
கண்ணன் கதைகள் – 6
புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். ’மிஷன் இம்பாசிபிள்’ படம் எல்லாம் பிச்சை… Continue reading கண்ணன் கதைகள் – 6
தினம் ஒரு பாசுரம் 2-ஸ்ரீ மதுரகவியாழ்வார்
பாசுரம் 2: நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையேதேவு மற்றறி யேன்குரு கூர்நம்பிபாவி னின்னிசை பாடித் திரிவனே. Paasuram 2: nAvinAl naviTTri inbam eidinEnmEvinEn avan ponnaDi meimmaiyE |dEvu maTTrariyEn kuruhoor nambipAvin inniSai pADi tirivanE
தினம் ஒரு பாசுரம்-ஸ்ரீ மதுரகவியாழ்வார்
பாசுரம் 1: கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. Paasuram 1: kaNNinuN SiruttAmbinAl kaTTuNNapaNNiya peru mAyan ennappanil |naNNi ten kuruhoor nambi enrakkAlaNNikkum amudoorum en nAvukkE
கண்ணன் கதைகள் – 4
யமுனையில் குளிக்க படகில் சென்ற போது பள்ளி சீருடையில் இந்தச் சிறுமி என் கவனத்தை ஈர்த்தாள்.பத்து ரூபாய்க்கு மீன்களுக்குச் சின்ன சின்ன உருண்டை வங்கிக்கோ என்றாள்.“தஸ் ரூப்பா”“வேண்டாம்”வாங்கிக்கோ என்றாள். அவளின் சிரிப்பில் மயங்கி பத்து ரூபாய் கொடுத்தவுடன் வாய் எல்லாம் பல் – பேச்சுக் கொடுத்தேன்“என்ன கிளாஸ்?”“ஃபர்ஸ்ட்”“ஸ்கூல் யூனிஃபார்ம்”“சுட்டி, சண்டே”படகில் இறங்கும் போது ”உன் பேர் என்ன?” என்றேன்“ராஜகுமாரி” சுஜாதா தேசிகன்31-08-2021ஸ்ரீஜெயந்தி
கண்ணன் கதைகள் – 3
ஆயர்பாடி மதுராவிற்கு யாத்திரையாக சென்றிருந்தேன்.கண்ணன் பிறந்த இடமான மதுராவுக்கு ஒரு காலை சென்றேன். கண்ணன் பிறந்த அந்த சிறைச்சாலையில்“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை ” மற்றும் பல்லாண்டு இரண்டையும் போலீஸ் வந்து விரட்டும் வரை பல முறை சேவித்துக்கொண்டு இருந்தேன்.பிறகு ஆயர்பாடிக்கு சென்றேன்.ஆயர்பாடியில் நந்தகோபருக்கு நிறையப் பசுக்கள் இருந்தன. கண்ணன் இங்கே தான் மேய்த்தார், விளையாடினார் எல்லாம் செய்தார்.சுருக்கமாக கிருஷ்ணர் காலடி பட்ட இடம். எங்கும் ஆட்டோ, ரிக்ஷாவிற்கு ‘ராதே ராதே’ தான் ஹார்ன். கடைகளிலும் வணக்கத்துக்குப்… Continue reading கண்ணன் கதைகள் – 3