புத்திரத ஏகாதசி

18.8.2021 ஆவணி மாதம் 2 ஆம் தேதி, புதன் கிழமை மூலம் நட்சத்திரம், புத்திரத ஏகாதசி .குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாகத் திகழவும் செய்வார்கள்.அது போல கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் புத்திர பாக்யம் இல்லாதவர்கள் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். சில சூழ்நிலைகள் காரணமாக விரதம் இருக்க முடியாதவர்கள்ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் அதில் குறிப்பிட்ட கீழ் உள்ள ஸ்லோகம் சொல்ல நல்லது நடக்கும்.படிக்கும்… Continue reading புத்திரத ஏகாதசி

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 – 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.70 வயதில்… Continue reading Bioclock என்றால் என்ன?

நாரதர் கதைகள்

”இறைவா, ‘ போதும் இந்த வேதனை என்னைக் காத்தருள மாட்டாயா… ?’ என்று கதறி அழும் நாரதர், ” சில க்ஷணங்களில் மாயை நடத்திய பெரும் விளையாட்டு – விளக்கும் எளிய கதை பகவான் கிருஷ்ணருடன், நாரதர் இரதத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இந்தக் கேள்வி நாரத மகிரிஷியின் மனதில் உதித்தது, பகவானே….மாயை என்றால் என்ன? அதன் வலிமை என்ன எனக்கு உணர்த்த முடியுமா? பகவான் வேண்டாம் என மறுத்தும் அடம் பிடித்தார். உடனே இரதத்தை நிறுத்தச்… Continue reading நாரதர் கதைகள்

ஓம் ஸ்ரீ நரசிம்மாய நமஹ

ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான்… Continue reading ஓம் ஸ்ரீ நரசிம்மாய நமஹ

எத்தனை பார்வைகள்..??

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார்.”முல்லை என்பது ஒரு கொடி வகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.”ஒரு தாவரம் பற்றிப் படர இடமின்றி தவித்தால் கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான் இன்னொரு மாணவன்.”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு… Continue reading எத்தனை பார்வைகள்..??

*யாருக்கு கிடைக்கும் லட்சுமி கடாட்சம்*

அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி. ”ஆகா… இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!” என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.… Continue reading *யாருக்கு கிடைக்கும் லட்சுமி கடாட்சம்*

ஆடி மாதத்தில் கருட பஞ்சமி விரதம் இருப்பது ஏன்?

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்கு தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்து கொண்டனர்.போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான்.… Continue reading ஆடி மாதத்தில் கருட பஞ்சமி விரதம் இருப்பது ஏன்?

ராஜ ராஜ சோழனின் வாரிசு

இவர்கள் யார் என்று பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் தற்போதைய பத்திரிக்கைகள் பணத்திற்காகவும் , அதிகார அடிமைகளாகவும் செயல்படுவதால்… இவர்கள்கெளரவிக்கப்படவேண்டியவர்கள்… பிச்சாவரம்(பித்தர்புரம்) ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் ராஜ ராஜ சோழ சூரப்ப சோழனார், சகோதரி மற்றும் தாயார் ராணியம்மாள் சிதம்பரத்தில் (தில்லை) குடமொழுக்குத் திருவிழாவில் தீட்சிதர்களால் அளிக்கப்படும் சிறப்பு மரியாதையை பெற வந்த பொழுது.அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில்.கோடி கோடியாய் சொத்திருந்தாலும் யாருக்கும் கிடைக்காத… Continue reading ராஜ ராஜ சோழனின் வாரிசு

இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!!

இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!! ?கங்கை நதிக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்ந்தவர் புண்ணியதாமா.துறவியான பிருஹத்தபா என்பவர் அந்த ஊரில் தினமும் ஹரி கதைகள் சொல்லி வந்தார்.புண்ணியதாமா அதைக் கேட்கத் தவறியதில்லை.ஹரிகதை கேட்பது, அன்னதானம் அளிப்பது இவையே அவரது அன்றாட பணி. ஆனால் அவர் ஒருபோதும் கங்கை நதியில் நீராடியதில்லை. ஒருமுறை ஆன்மிக யாத்திரையாக வந்த இரு பயணிகள் காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.இரவு நேரம் என்பதால் தங்குமிடம் தேடி அலைந்தனர். புண்ணிய தாமாவின் குடில்… Continue reading இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!!

ஒரு மகனின் கடமை

#தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .காரணம் மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்று முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். அதுவும் மனைவிக்கு தெரியாமல் இப்படியே வருடங்கள் கடந்தன.ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக முதியோர் இல்லத்திலிருந்து தகவல் வந்தது.மகனும் உடனடியாக தன் தாயை கண்ணீருடன் சந்திக்கச் சென்றார்.… Continue reading ஒரு மகனின் கடமை