” சான்றோர் சான்றோர் பால ராப ” ! நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் வகுப்பாசிரியர்களுடைய பயிற்சியை விடக் கூடுதலாகத் தனியாசிரியர்களை அமர்த்தி எங்கள் பெற்றோர்கள் கண்காணித்ததை எண்ணிப் பெருமையடைகிறேன்.தொடக்க காலத்திலேயே அதாவது முதல் வகுப்புப் பயிலும்போதே இராயப்பேட்டை பெசன்டு சாலை இல்லத்தில், ஆங்கிலோ – இந்திய மாதரசியான திருமதி ஒகோனா ஆங்கிலத்தைச் சரியாக உச்சரிக்கும் ஒலிப்பு முறையைக் கற்றுத் தந்தது இன்றும் என்னுடைய ஆங்கிலச் செழுமைக்கு அடிப்படையாகும் .கணக்குப் பாடத்திற்காக என்னுடைய மாமா தலைமைச் செயலகத்தில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 42
Author: Dr. Avvai N Arul
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 16
செயலில் செம்மையை வளர்ப்போம் !” கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு ! “என்று மூதறிஞர் வ சுப மா மனமுருகிப்பாடிய வள்ளல் அழகப்பரால் தான் இன்று காரைக்குடி பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் அவரே வேர் என்றால் அது மிகையில்லை .காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றியதோடு, ஒன்றிய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 16
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 41
“எம்முளும் உளன் ஒரு பொருநன்” எண்பதுகளின் தொடக்கத்தில் எந்தையார் எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் பட்டிமன்றங்களில் நடுவராக உரையாற்றுவதற்கும் தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று உரையாற்றி மகிழ்வித்தார்.செஞ்சி என்றால் அப்பன்ராஜ் (திருவாமூர் சமணத் திருமடத்தின் தலைவராக உள்ளார்),திருச்சி என்றால் திரு.குணசேகரன் (கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் (ஓய்வு)),தஞ்சை என்றால் இராஜேந்திரன், மாயவரம் என்றால் அண்ணல் இராஜசேகரன்,சேலம் என்றால் சண்முகம், நெல்லையென்றால் முருகன், செங்கோட்டை என்றால் ஆசிரியர் ஜனார்தனன்,தென்காசி என்றால் டாக்டர் பத்மானந்தன்,நாகர்கோயில் என்றால் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,கிருஷ்ணகிரி என்றால்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 41
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15
காலப்பேழையைத் திறந்த கலைஞர் திறம் !பச்சையப்பர் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த நிறைவாண்டில் 1957-58 இல் நாள் நிகழ்ச்சிக்குறிப்பில் வரலாற்றுப்பண்பாட்டுப் பேரறிஞர் தாயன்பி உரையாற்றுவார் என்றிருந்தது .மயிலையில் சாஸ்திரி அரங்கில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. எண்ணினால் எழுபதுபேர்வந்திருப்பார்கள்.அவ்வளவுபேருமவரலாற்றுத்துறைப்பேராசிரியர்கள் ,அறிஞர்கள் ,இதழாளர்கள் என்று அவை நிரம்பி வழிந்தது . அணிந்தபடி ஒருவர் விரைந்து வந்தார் .அவர் தான் அறிஞர் தெ பொ மீ ,அறிஞர் பெ நா அப்புசாமி எழுந்து நின்று அவருக்கு இடம் தந்து விட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 40
“ வாழ்வியல் காட்டிய வளம் ! ” சென்னையில் வளமனைகளின் வாயில் முகப்பில் நாய்கள் ஜாக்கிரதை ( Beware of Dogs ) என்ற பெயர்ப்பலகை வாடிக்கையாகக் காணலாம். அவ்வண்ணமே எங்கள் அண்ணா நகர் இல்லத்தில் எந்தையார் புதிய தொடராக ‘ விழிப்போடு வருக ’ என்ற பெயர்ப்பலகையை வைத்திருந்தார். இப்பெயர்ப்பலகை அந்நாளில் பல வார இதழ்களில் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.1974 முதல் 1998 வரையில் எங்கள் இல்லத்தின் அசைக்க முடியாத அருந்துணையாக நான்கு கால் நண்பராக,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 40
அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு -20
பெருமக்களே!முன்னொரு பிறவியிலேயே நீ ஒரு அழகிய பெண்ணாக வேடர் தலைவன் மகளாக பிறந்து இருந்தாய் அல்லவா!ஒரு நாள் மாலை சின்ன குயிலாகிய நீயும் உன் தோழிகளும் மின்னல் கொடிகளாய் ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டே இருந்தீர்கள்.உன்னையே நினைத்து இயங்கிக் கொண்டிருக்கும் உன் மாமன் மகன் மாடன் உன்னை மணந்து கொள்வோம் என்ற கனவுலகில் தேன்மழை நாட்டு வேடன் மகன் நெட்டைக் குரங்கன் நேராக நின்று தந்தையை மிரட்டி உன் மனம் பற்றி நினையாமல் மனம் நிச்சயித்து சென்றுள்ளான்.இவர்… Continue reading அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு -20
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 38
“தண்ணளி பொழிந்த தாயுள்ளம்!” நான் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது என் அம்மாவிற்குப் பெறர்கரிய வாய்ப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு அவர்கள் நான்காண்டுகள் அயன் முகமையில் (Deputation) பணியாற்றுவதற்கு வட ஆப்பிரிக்காவிலுள்ள இலிபியா நாட்டிற்குச் செல்வதற்கு ஆணை கிடைக்கப்பெற்றது. சூலைத் திங்கள் 1979-ஆம் ஆண்டில் தன்னந்தனியாகப் புறப்பட்டு, இலிபியா நாட்டின் இரண்டாம் தலைநகரமாகத் திகழ்ந்த பென்காசியில் அரசு மருத்துவமனையில் உயர் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்துணையாகச் சென்னை மருத்துவக் கல்லூரியில் அவரோடு இணைந்து பயின்ற மருத்துவர் கதீஜாவும்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 38
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 36
“சங்க இலக்கியச் சாரலிலே” பங்குச் சந்தை வாயிலாகப் பொதுமக்களிடமிருந்து பங்குகளாக நிதி திரட்டுகின்ற நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடுகின்ற சிறப்பு வாய்ந்த நிறுவனமாகக் கிளியா நிறுவனம் திகழ்ந்தது. சென்னையில் முதன்முதலாக 06.05.1992-ஆம் நாளன்று இரு நிறுவனங்களின் (பென்டாபோர் மென்பொருள் நிறுவனம் மற்றும் எஸ்.ஐ. வீடு கட்டும் நிறுவனம்) பங்கு விளம்பரங்களை வெளியிட்டோம். அன்று முதல் 1997 வரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றுக் கருப்பு வெள்ளை, வண்ண விளம்பரங்கள், இந்தியா முழுதும் செய்தியாளர் கூட்டங்கள், பங்கு முகவர்கள் கூட்டங்கள்,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 36
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 35
“வளர்க வாழைக்கன்று” ஒருமுறை ஒரு விளம்பரத்தை நான் தமிழில் இவ்வாறு எழுதியிருந்தேன். அதாவது, முதன்முதலில் தொலைக்காட்சிக்கு வேண்டிய ‘டிஷ் ஆன்டெனா’ சென்னைக்கு வந்தபொழுது, அதை விளம்பரமாக வரைவதற்காகப் பெங்களூரைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சென்னைக்கு வந்திருந்தார்கள். யாரோ சொன்னார்கள் என்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரம் வரைவதற்காகத் தீர்மானித்தார்கள். ‘டிஷ் ஆன்டெனா’ மூலமாகத் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சன் டிவி, ஜெயின் டிவி, ஜீ டிவி, சிஎன்என் டிவி, பிபிசி டிவி இவைகளையெல்லாம் பார்ப்பதற்கு இந்த ‘ஆன்டெனா’ உதவுகிறது… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 35
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 34
‘ஆய்வுக்கும் கலைக்கும் ஓய்வில்லை’ ஆங்கில அரசு உருவானதும் பல்வேறு பள்ளிகளையும் உயர்நிலைப்பள்ளிகளையும் மேனிலைப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்க நினைத்தார்கள். அந்த வகையிலேதான் பல்கலைக்கழகமாக கல்கத்தா பல்கலைக்கழகம், பம்பாய்ப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மூன்றும் முதலில் உருப்பெற்றன. இவற்றைத் தொடர்ந்து உருப்பெற்று ஓங்கியதுதான் தில்லிப் பல்கலைக்கழகம். தில்லிப் பல்கலைக்கழகம் பரந்து விரிந்த இடத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பல்கலைக்கழகமாகும். தில்லிப் பல்கலைக்கழகத்தில் பழமை பெரிதும் போற்றப்படுகிறது என்பது போன்ற கருத்தால் பிறகுதான் புதுமை உணர்வை வளர்க்க சவகர்லால் நேரு… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 34