“எண்ணிப் பார்த்து ஏற்றம் பெறுக” என் வலது காலின் தசைப்பகுதியில் காயம்பட்ட ஒரு வடு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக உள்ளது.அவ்வடுவைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒரு நிகழ்வு நெஞ்சை நெருடும்.நான் நான்காம் வகுப்புப் (1976) பயிலும்பொழுது, மாலைவேளைகளில், கிரிக்கெட் மட்டையும் ஓட்டமுமாக இருப்பது வழக்கம்.விளையாட்டுத் திடலிலிருந்து அண்ணாநகர் இல்லத்திற்கு வேகமாக வந்து எங்கள் வீட்டின் மதிற்சுவரைத் தாண்டுவதுபோலப் பாய்ந்து தாவிக் குதிக்கும் முன், பாதி சுவருடன் நானும் தரையில் விழுந்தேன்.விழுந்த வேகத்தில், எழமுடியாமல் தத்தளித்தேன். அப்பொழுது உதவிக் கரம் நீட்டி… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 45
Tag: purananuru
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 44
“நம்பி வழங்கிய நன்கொடை” சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் ஏழாண்டுகள் படித்ததும், வெவ்வேறு பாடங்களைப் பல்வேறு வகுப்புகளாக காலை முதல் மாலை வரை (9.45-10.30- முதல் பாடவேளை; 10.30-11.15- இரண்டாம் பாடவேளை; 11.15-11.30- இடைவேளை; 11.30-12.15- மூன்றாம் பாடவேளை; 12.15-1.00 – நான்காம் பாடவேளை; 1.00-1.30 – உணவு இடைவேளை; 1.30-1.45 – நன்னெறிப் பாடவகுப்பு; 1.45-2.30 – ஐந்தாம் பாடவேளை; 2.30-3.15 – ஆறாம் பாடவேளை; 3.15-3.20 – இடைவேளை; 3.20-4.05 – ஏழாம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 44
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43
“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!” சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வு நெருங்கி வந்த அந்த நேரத்தில் எங்கள் அண்ணாநகர் இல்லம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாகவே எங்கள் வீடு பொதுவரங்கம் நடப்பது போலத்தான் இயங்கும்.அப்போது என் தந்தையார் தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மூதறிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் எனப் பல நிலையினரைக் கண்டு அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மேலும் அன்றைய… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 42
” சான்றோர் சான்றோர் பால ராப ” ! நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் வகுப்பாசிரியர்களுடைய பயிற்சியை விடக் கூடுதலாகத் தனியாசிரியர்களை அமர்த்தி எங்கள் பெற்றோர்கள் கண்காணித்ததை எண்ணிப் பெருமையடைகிறேன்.தொடக்க காலத்திலேயே அதாவது முதல் வகுப்புப் பயிலும்போதே இராயப்பேட்டை பெசன்டு சாலை இல்லத்தில், ஆங்கிலோ – இந்திய மாதரசியான திருமதி ஒகோனா ஆங்கிலத்தைச் சரியாக உச்சரிக்கும் ஒலிப்பு முறையைக் கற்றுத் தந்தது இன்றும் என்னுடைய ஆங்கிலச் செழுமைக்கு அடிப்படையாகும் .கணக்குப் பாடத்திற்காக என்னுடைய மாமா தலைமைச் செயலகத்தில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 42
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 41
“எம்முளும் உளன் ஒரு பொருநன்” எண்பதுகளின் தொடக்கத்தில் எந்தையார் எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் பட்டிமன்றங்களில் நடுவராக உரையாற்றுவதற்கும் தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று உரையாற்றி மகிழ்வித்தார்.செஞ்சி என்றால் அப்பன்ராஜ் (திருவாமூர் சமணத் திருமடத்தின் தலைவராக உள்ளார்),திருச்சி என்றால் திரு.குணசேகரன் (கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் (ஓய்வு)),தஞ்சை என்றால் இராஜேந்திரன், மாயவரம் என்றால் அண்ணல் இராஜசேகரன்,சேலம் என்றால் சண்முகம், நெல்லையென்றால் முருகன், செங்கோட்டை என்றால் ஆசிரியர் ஜனார்தனன்,தென்காசி என்றால் டாக்டர் பத்மானந்தன்,நாகர்கோயில் என்றால் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,கிருஷ்ணகிரி என்றால்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 41