‘கலப்புச்சொற்களைத் தவிர்ப்பதில்லை’ முதுகலைமுடித்து முதுநிலை ஆய்வு (M.Phil.) வகுப்பில் இணைந்தேன். அவ்வகுப்பில் 16 பேர் இணைந்து படித்தோம். பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும், பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராகவும் திகழும் பேராசிரியர் சித்ரா மற்றும் மல்லிகா, செந்தாமரை, மூர்த்தி, மகாதேவராவ் போன்றோர் என்னுடன் பயின்றனர்.எனக்கு இளம் பிராயத்தில் எதைப் படித்தாலும் அப்பாடத்தை ஒட்டிய இடங்களைப் பார்க்க வேண்டும், படித்த நாடகக் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் என் ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும். ஆறாம் வகுப்பில் செஞ்சிக்கோட்டை… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 33
Author: Dr. Avvai N Arul
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 32
‘ வழக்குச் சொற்கள் முடிவதில்லை ’ சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றபோது,முனைவர் சி. பாலசுப்பிரமணியம் – சங்க இலக்கியத்தையும், முனைவர் வ. ஜயதேவன் – அகராதியியலையும், முனைவர் மா. செல்வராசன் – இக்காலம் (ம) இடைக்காலம் மற்றும் படைப்பிலக்கியத்தையும், முனைவர் இ. சுந்தரமூர்த்தி – தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தையும், முனைவர் அ. அ. மணவாளன் – இலக்கியத்திறனாய்வு ஒப்பிலக்கியத்தையும், முனைவர் ந. தெய்வசுந்தரம் – பொது மொழியியலையும், முனைவர் இன்னாசி, முனைவர் பொன்னுசாமி மற்றும் ஆய்வு மாணவர்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 32
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 31
‘வழக்குச் சொற்கள் முடிவதில்லை’ சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முழுநேர வகுப்பில் இணைந்து, பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் அறிவுரைக்கிணங்க போராசிரியர் வ.ஜெயதேவனிடம் முதுநிலை ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் வ. ஜெயதேவன் உயர்ந்த சிந்தனையாளர்; அடுத்தவரை ஊக்குவிக்கும் மனமாட்சியும், மதிநுட்பமும் வாய்ந்தவர். பல்வேறு செய்திகளைத் தேர்ந்து தெளிந்து முடிவுகளைக் கூறுபவர். பேராசிரியர் ஜெயதேவன் போன்றவர்கள் தொடக்கத்திலேயே அயல்நாடுகளுக்குச் சென்றிருந்தால், அவருடைய அறிவுப் பெருமிதம் உலகெல்லாம் பரவியிருக்கும். போதுமென்ற மனமே அவருடைய புலமைக்கு அமைதி மனத்தைத் தந்துவிட்டது. கவியரசர் ஈரோடு தமிழன்பன் எழுத்தெண்ணி… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 31
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 30
அயற்மொழிச் சொற்களின் அணிவரிசை’ இளம் பிள்ளைகளாக நாங்கள் இருந்த பொழுதே நாங்கள் அணிந்த சட்டைகளும் பேண்டுகளும் வித்தியாசமாக அமைந்ததற்குக் காரணம் இராயப்பேட்டை கவுடியா மடத்திலுள்ள ‘ஜூவல் டெய்லர்ஸ்’தான். அதேபோல அருகிலுள்ள பைலட் திரையரங்கத்தில் நாங்கள் பல திரைப்படங்களைப் பார்த்துள்ளோம். குறிப்பாக, ‘காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தை அங்கு தான் நாங்கள் பார்த்தோம்.அண்ணாநகரில் எங்கள் இல்லத்திற்கு அருகிலேயே, பெரிய விளம்பர நிறுவனத்தை நடத்திய திரு.இ.பி.ஜி. நம்பியார், சென்னையின் ஆட்சியராக இருந்த திரு.எம்.ஏ. ஷெரீப் இ.ஆ.ப., தலைசிறந்த குழந்தை நல… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 29
அயற் மொழிச் சொற்களின் அணிவகுப்பு இராயப்பேட்டையிலுள்ள பெசன்ட் ரோடு இல்லத்தில் இருந்தபொழுது எங்களுடைய வீட்டில் எந்தையாரின் நண்பர்கள் பலர் வந்து செல்வதுண்டு. அதில் மிகக் குறிப்பாக பெருமிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ‘நயவுரை நம்பி’ ஜெகத்ரட்சகன், மேலவை உறுப்பினர் டாக்டர். இரா. ஜனார்த்தனம், பேராசிரியர்கள் சி. பாலசுப்பிரமணியம், சஞ்சீவி, ‘அருட்பா அரசு’ கிரிதாரி பிரசாத், ‘திருவாசகமணி’ கே.எம்.பாலசுப்ரமணியம், திரு. அருள் சங்கர், திரு. வீரமணி, திரு. சுகிசிவம், வழக்கறிஞர் இரவி, ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான், ‘கவிக்கோ’… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 29
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 28
அருந்தமிழில் கலந்துள்ள வடமொழி / ஆங்கிலச் சொற்கள் என் அம்மாவின் ஆருயிர் தந்தையார் திரு.மாசிலாமணி பிள்ளையவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி, என்அப்பா எழுதிய நினைவுக் குறிப்பை என் தாயாரிடம் படித்துக் காண்பித்தேன். அப்போது உடனே என் அம்மா கேட்டார்கள், ‘உனக்கு என் அப்பாவை நினைவிருக்கிறதா?’ என்று. எனக்குத் தாத்தாவை மிக நன்றாக நினைவிருக்கிறது என்று நான் கூறினேன். அவர் எனக்குப் பால் கலந்து தந்த காட்சிகளெல்லாம் என் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறது என்றேன்.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 28
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 27
நாளொரு சொல்லும் புதிய பயன்பாடும் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான ஏழு திங்கள் கழித்து இராயப்பேட்டையிலுள்ள சரோஜினி தனியார் மருத்துவமனையில் பிறந்ததிலிருந்து 1973 வரை இராயப்பேட்டையிலேயே, 10, பெசன்ட் சாலையில் வளர்ந்து வந்தேன். பெசன்ட் சாலையின் சிறப்பு என்னவென்றால், நாங்கள் மாடி வீட்டில் இருந்தோம். கீழ்தளத்தில் பொதுப்பணித்துறையின் பொறியாளர் பழனிசாமி, அவரின் துணைவியார் கமலா, அருமைப் பிள்ளைகள் மோகன், குமார், திருமதி கமலாவின் தங்கை சிவகாமி, மற்றும் திரு. பழனிசாமியின் தம்பி வழக்கறிஞர் நல்லியண்ணன் துணைவியார் திருமதி மல்லிகா,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 27
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 26
செய்யுளில் வரும் இயற்சொற்கள் இளவரசர்களின் எழிற்சோலை (Princes of Presidency) என்ற பெருமிதப் பெயர் நானிலம் புகழும் மாநிலக் கல்லூரிக்கு வழக்கிலிருந்த நிலையில், அரண்மனைக்குள் நுழைவதைப்போல் தனிப்புகழ் வாய்ந்த தமிழ்த்துறையில் இளங்கலை தமிழிலக்கியத்தில் 1985-இல் இணைந்தேன். தமிழ்த்துறையில் பணியாற்றிய பதினேழு பேராசிரியப் பெருமக்களை (‘Major’ P. பாண்டுரங்கன், (தமிழ்த்துறைத் தலைவர்), ‘சிந்தனைத் திலகம்’ இ. மறைமலை, ‘அன்பின் அன்னை’ இராசலட்சுமி, ‘கவிவேந்தர்’ மு. மேத்தா, ‘கவிதைப் பேரொலி’ பொன் செல்வகணபதி, ‘இலக்கணச்சுடர்’ இரா. சண்முகம், ‘இலக்கண ஒலி’… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 26
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 14
அன்றே துளிர்த்திருந்த அறிவியல் சிந்தனைதொல்காப்பியத்தில் குறிப்பாகவும் சிறப்பாகவும் பல்வேறு இயல்புகள், பழங்கால வாழ்க்கை முறைமைகள், இன்றும் போற்றிப் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு, ஒரு சில, புது உலகத்திற்கும் வழக்கங்களுக்கும் இன்றைய முடிவுகளுக்கும் ஒத்து வர இயலாத நிலையுடையதாயினும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த பழந்தமிழர் வரலாற்றுப் பெட்டகம் என்பதை நினைவூட்டும் கருவூலம் என்றெல்லாம் நாம் பெருமிதம் கொள்ளும்போது, அவற்றுக்கெல்லாம் சிகரமாக மரபியலில் பின்வரும் நூற்பா அமைந்துள்ளதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே – 1இரண்டறி… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 14
அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 15
சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார்.இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா?குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள்.குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணிசூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக செய்து… Continue reading அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 15