ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும்.பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.ஐம் என்ற சொல் சரஸ்வதியையும்,… Continue reading துர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் ?
Tag: sakthivel
சுவாமி விவேகானந்தர் கதைகள்
சுவாமி விவேகானந்தர் கதைகள் – பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!சுவாமி விவேகானந்தர் அமெரிக்க தேசத்திற்குச் சென்று மிகப்பிரபலமடைந்து பெரும் புகழையும் பெற்றார். 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுவாமிஜி உரை நிகழ்த்தினார். இந்த சொற்பொழிவு அநேகரின் பாராட்டுதல்களைப் பெற்றது பல்கலைக் கழக மாணவர்களுக்கு சுவாமிஜியை மிகவும் பிடித்துப் போயிற்று. கீழைத் தத்துவத் துறை தலைமைப் பதவியை சுவாமிஜிக்கு அளிக்க இப்பல்கலைக்கழகம் முன் வந்தது இது மிகவும் அபூர்வமான விஷயம்.… Continue reading சுவாமி விவேகானந்தர் கதைகள்
பலத்தை வழங்குபவர் திருமாலே….
பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார்சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால்… Continue reading பலத்தை வழங்குபவர் திருமாலே….
போலி நீங்கினால் சிறந்தவை கிடைக்கும்
ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம்பிடித்தாள்.“இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை” என்றாள் தாய்.?நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி ‘ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்’ மாலை வாங்கி தரசொல்றேன்… இது வேண்டாம்மா” என்றாள் தாய்.?ஆனால் அச் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்…அந்த சிறுமிக்கு… Continue reading போலி நீங்கினால் சிறந்தவை கிடைக்கும்
சம்சார சாகரம்
சம்சார சாகரம்’, என்ற பிறவிக் கடலை கடக்க, ‘விஷ்ணு நாமமே கதி… விளக்கும் எளிய கதை. ஒரு சாது எப்பொழுதும் விஷ்ணு நாமமே கதி என நினைத்து ஒரு மரத்தடியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.‘ஐயா! நான் உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்’, என்றது.‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை.… Continue reading சம்சார சாகரம்
அலெக்சாண்டர்
அலெக்சாந்தரின் நாடு மாசிடோன். துவக்கத்தில் மாசிடோனியர்களை கிரேக்கர்களாகவே அக்கால கிரேக்கர்கள் கருதவில்லை. கிரேக்கத்துக்கு வடக்கே இருந்த காட்டுமிராண்டிகளாக தான் கருதினார்கள். காரணம் மாசிடோனியர்களிடம் கலை, அறிவியல், தத்துவம், நகர நாகரிகம் எதுவும் இல்லை. அவர்கள் சும்மா ஆடு மேய்த்துக்கொண்டும், சண்டை, கலவரங்களில் ஈடுபடுக்கொண்டும் இருந்தார்கள்.இந்த சூழலில் பிலிப் மாசிடோன் ஆட்சிக்கு வருகிறார். அவரது நோக்கம் கிரேக்கத்தை ஒன்றிணைத்து ஒரே நாடாக்கி, பொது எதிரியான பாரசிகத்தை வீழ்த்தவேண்டும் என்பதுதான். பாரசிகம் அப்போது மிகப்பெரும் பேரரசு. எகிப்து, துருக்கியில் துவங்கி… Continue reading அலெக்சாண்டர்
கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்?
எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம், ஒருமுறையாவது கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்? என்று யோசித்து பார்த்திருக்கிறோமா?…இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்…கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பது நம் முன்னோர் வாக்கு.! ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது….○ வாருங்கள் கோவிலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துகொள்வோம்…!!!○கொடிமரம் என்பது இறைவனை குறிக்கும்.○கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும்.○உயரே… Continue reading கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்?
கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம். கீதாசாரம்: பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:- பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம். கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன… Continue reading கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
பராசர பட்டாச்சாரியார் ..
ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார் ..” என்னையும் .. என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ .. நீர் ?? ..”என அரங்கன் கேட்க ..” முதலில் ..உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாரும் .. பார்க்கலாம் ..!!..”என்றாராம் பராசரர் ..” அட ..ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ ..??..”என்று சிரித்த அரங்கன் ..கருணையும் வாஞ்சையும் மேலிட .. பராசரபட்டருக்கு .. ஆயிரம் நாக்குகளை வழங்கினான் ..!!ஆனந்தத்தில் கைகள் குவித்து ..சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர் ..” மன்னிக்கவும்… Continue reading பராசர பட்டாச்சாரியார் ..
திருப்பதிமணி ஓசை ரகசியம்
பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை ரகசியம்! மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும்போது ஆலய மணி ஓசை எழுப்பபடுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பூஜையின்போது மணி ஓசை ஒலிப்பதில்லை. இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விசயம் இதைபற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும்.அநேகம் பேருக்கு இந்த விசயம் தெரிந்திருக்காது. திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசைக்கு கண்டநாதம் எனப்பெயர். திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின்… Continue reading திருப்பதிமணி ஓசை ரகசியம்