அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13

மணியும் பவளமும் விரவிய மாய மாலை..! ================================================= உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார். 1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது. 2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13

Tamil panchangam-July 29,Thursday

Indraya Naal Today’s Panchangam – July 29, 2021 (Thursday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* சஷ்டி 27:53 Nakshatram* உத்திரட்டாதி 12:02 Rahukalam* 1:49 pm-3:24 pm City சென்னை Sunrise & Sunset 5:53 am (Sunrise) & 6:36 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* சஷ்டி 27:53 Nakshatram* உத்திரட்டாதி 12:02 Yogam* சுகர்ம 20:02 Karanam* கரசை 15:15 வனசை… Continue reading Tamil panchangam-July 29,Thursday

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-12

மொழிக்கலப்பும் – நன்னூல் காட்டும் நெறிப்பாடும்..! ================================================= நன்னூல் பதவியலில், வடமொழியாக்கம் பற்றிய அயல் வழக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. இடையில் நான்கும், ஈற்றில் இரண்டும், அல்லா அச் ஐ வருக்கம் முதல், ஈறு; யவ் ஆதி நான்மை, ளவ், ஆகும் ஐ-ஐம் பொது எழுத்து; ஒழிந்த நால்-ஏழும் திரியும். (19) அவற்றுள், ஏழாம் உயிர் இய்யும் இருவும்; ஐ வருக்கத்து இடையில் முன்றும், அவ்அம் முதலும், எட்டே யவ்வும்; முப்பது ச, யவும்; மேல் ஒன்று ச, டவும்;… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-12

Tamil panchangam-July 28,Wednesday

Indraya Naal Today’s Panchangam – July 28, 2021 (Wednesday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* பஞ்சமி 26:47 Nakshatram* பூரட்டாதி 10:45 Rahukalam* 12:15 pm-1:49 pm City சென்னை Sunrise & Sunset 5:53 am (Sunrise) & 6:37 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* பஞ்சமி 26:47 Nakshatram* பூரட்டாதி 10:45 Yogam* அடிகண்ட 20:18 Karanam* கௌலவம் 14:31 சைதுளை… Continue reading Tamil panchangam-July 28,Wednesday

தமிழ்க்கடல் இளங்குமரனார் மறைவு !

மூதறிஞர் இளங்குமரனார்( சனவரி 30, 1930 – சூலை 25, 2021 ) தமது கனிந்த முதுமையில் மறைந்தார் . முதுபெரும் தமிழ்க்கடல் ,நடமாடும் தமிழியக்கம் ,முதுமுனைவர் என்று பல்கலைக்கழகங்கள் பட்டப்பேறும் வழங்கினர் .அறிஞர் உலகம் உச்சி மேற்கொண்டு மெச்சினர் . தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக்கொண்ட அவர், தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்பிழிவான ‘தேவநேயம்’ பத்துத் தொகுதிகளைத் தொகுத்தவர். திருக்குறள் வழியில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட 4621 க்கும்… Continue reading தமிழ்க்கடல் இளங்குமரனார் மறைவு !

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-11

தமிழில் கடந்த திசைச் சொற்கள்..! திசைச்சொற்கள் ஏறத்தாழ வடமொழிக்கு முந்தைய வடிவம் கொண்ட ஆரியச்சொல் வடதிசையினின்றும் வந்து தமிழில் புகுந்ததைப் போலவே, ஏனைய திசைகளிலிருந்தும் சில சொற்கள் வந்து புகுந்துகொண்டன. அவற்றைத் திசைச்சொல் என்று குறித்தனர். நட்புறவு, வணிகம், கல்வி முதலிய தொடர்புகளினாலும், வேற்றவர் ஆட்சியினாலும், திசைமொழிகள் மக்கள் பேசும் மொழிகளில் கலப்பது இயற்கையாகும். அச்சொற்களை வரம்பு கடந்து செல்ல விடாமல் மட்டுப்படுத்துவதும், அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்களை படைத்து வழங்குவதும், தமிழுக்கு மரபாயிற்று.  ஆரியச் சொற்களை… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-11