ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது.அப்போது ஒரு தேள் ஓடிவந்து,“ஆமை அண்ணா..! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது.உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன்” என்றது!ஆமைக்குப் பாவமாக இருந்தது.இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக ,“ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமாதான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன். ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ அவ்வளவுதான் சரியா?”என்று சொல்லி தன் முதுகில் ஏற்றிக்கொண்டது.தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது.… Continue reading பிறவி குணம் மாறாது
யாருடனும் ஒப்பிட வேண்டாம்..!!
ஒரு பேராசிரியர் ஒரு ஜென் ஞானியிடம் சென்று, ”நான் ஏன் உங்களைப்போல இல்லை? உங்களைப்போல என்னால் ஏன் அமைதியாய் இருக்க முடியவில்லை? உங்களுக்கு இருக்கும் அறிவு எனக்கு ஏன் இல்லை?” என்று கேட்டார்.ஞானி சொன்னார், ”இன்று முழுவதும் என்னுடன் இருந்து என்னை கவனித்து வா. எல்லோரும் சென்றவுடன் உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.”அன்று முழுவதும் ஏராளமான மக்கள் ஞானியை வந்து தரிசித்து சென்றனர். மாலையில் எல்லோரும் போன பின் பேராசிரியர் ஞானியிடம் தன் கேள்விக்கு பதில்… Continue reading யாருடனும் ஒப்பிட வேண்டாம்..!!
Tamil Panchangam-August 06,Friday
Indraya Naal oday’s Panchangam – August 6, 2021 (Friday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* திரயோதசி 18:27 Nakshatram* திருவாதிரை 06:37 Rahukalam* 10:40 am-12:14 pm City சென்னை Sunrise & Sunset 5:55 am (Sunrise) & 6:34 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* திரயோதசி 18:27 Nakshatram* திருவாதிரை 06:37 Yogam* வஜ்ரா 25:10 Karanam* வனசை 18:27 பத்திரை… Continue reading Tamil Panchangam-August 06,Friday
மனிதனை திருத்த-கதை
ஞானி ஒருவர் :ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன்_ஒருவன் வந்தான் ” சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்? என்று கேட்டான். ஞானி_அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான்… Continue reading மனிதனை திருத்த-கதை
திருத்தலங்கள்எபிசோடு 03 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
வரிய கட்டுங்க தனுஷ்
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-18
கலப்பு மொழி கன்னல் மொழியாகக் காட்சியளிக்கிறதே..! கல்விக்கூடங்களில்…கல்விக்கூடங்கள் ஆங்கிலேயர் காலத்தில் வரையறுக்கப்பட்ட கல்வி முறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றன. ஆங்கிலம் பயிற்று மொழியாகவே (Medium of Instruction) எங்கும் எளிதில் உள்ளதென்றால் மிகையாகாது. ஏறத்தாழ இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்த நிலைதான். ஆங்கில ஆட்சிக்கு அகப்பட்ட நாடுகள் அனைத்திலும் இந்த அவலம் உண்டு.தமிழ்நாட்டில் ஆங்கிலத்தின் வாயிலாகப் பாடங்களைக் கற்பிக்கும் வகுப்புக்குச் செல்வாக்கு மிகுதியாக உள்ளது. ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள வகுப்பிலே பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் இந்நாட்டில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-18
படித்ததில் பிடித்த சரித்திர நாவல்..
“ ஸ்ரீரங்கம் ரங்கமன்னார்” தன் குழந்தைகளை அரவணைத்து எங்கோ ஒரு உச்சாணிக் கொம்பில் ஏற்றி உட்கார வைத்து விடுவார்.இது ரங்கனின் பரிபூரண அருட் கடாட்சம்…..!ஸ்ரீரங்கம் மண்ணின் மகத்துவம் …!!எழுத்தாளர் திரு. கோகுல்சேஷாத்ரி அவர்கள் வரலாற்றில் எம்.ஏ.,எம்.பில் படிப்பு முடித்து சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் ( டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்வித்தியாசமான கதைக் களங்களில் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளுடன் இவர் படைக்கும் புதினங்கள் வாசகர்களை இயல்பாகக் கடந்த காலத்திற்குக் கடத்திச் செல்கின்றன. சென்னை… அண்ணாசாலையிலிருந்து… Continue reading படித்ததில் பிடித்த சரித்திர நாவல்..
சிவாவின் அஷ்டமூர்த்தி வடிவம் பகுதி 1
17 மே 2021.எனது முந்தைய சுயவிவரம் கடந்த 2020 ஆம் ஆண்டில் பேஸ்புக்கால் செயலிழக்கச் செய்யப்பட்டதால், பதினாறு வருடங்களுக்கும் மேலாக நீண்ட காலத்திற்குத் திரட்டப்பட்ட இடுகைகளை நான் கணிசமாக இழந்தேன். எனினும் என் நினைவுகள் முகநூலில் பகிரப்பட்ட சில படங்களுடன் மீண்டும் எழுந்தன, மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு பற்றிய எனது நீண்ட பதிவுகளில் சில அத்தியாயங்களைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமானது என்று கருதினேன். இந்த விஷயத்தில் தொகுதி 1 ஐ தொகுக்க நூறு அத்தியாயங்கள் எழுதியிருந்தேன்.… Continue reading சிவாவின் அஷ்டமூர்த்தி வடிவம் பகுதி 1
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-07
ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம். அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல் சென்று விட்டதாம். இதுதான் நான் சென்ற வாரம் பேசிய பாடுபொருளாகும். எங்கே போனதாம்? தெரியவில்லை. எப்படிப் போனதாம்? புரியவில்லை. அந்தக் குட்டிப் பிசாசுக் குயிலைக் காணவில்லையே என்று ஏங்குகின்ற தருணத்தில், அந்தப்பாடலை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் அவர்கள் அதை எவ்வளவு அழகாகப் பாடிக் காட்ட முடியுமோ பாடி உலகெல்லாம் உள்ள… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-07