ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ”சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று… Continue reading மனம் ஒரு குரங்கு..!!
Author: Palakarai Sakthivel
விஷ்ணு புராணம் அறிமுகம்
18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம்.இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார். “என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே!… Continue reading விஷ்ணு புராணம் அறிமுகம்
ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி
ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி30.08.2021 (திங்கட்கிழமை)கோகுலாஷ்டமி / ஸ்ரீஜெயந்தி. 31.08.2021(செவ்வாய் கிழமை)ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்திகிருஷ்ணரை பற்றிய 30 தகவல்கள் மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார். சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர்… Continue reading ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி
கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்?
‘கார்டியாக் அரெஸ்ட்’ என்பது மிகவும் மோசமானது. விவேக் அவர்கள் இறந்தது இதனால் தான். எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென ஒருவரை தாக்க கூடியது ‘கார்டியாக் அரெஸ்ட்’. ஆனால் மாரடைப்புக்கு சில அறிகுறிகள் உடலில் தென்படும். நெஞ்சு, தோள்பட்டை வலி, மூச்சு திணறல் போன்ற சில அறிகுறிகளை காண்பித்துவிட்டு தாக்க கூடியது மாரடைப்பு என்பதால் அது தாக்கிய நோயாளிகள் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்.மாரடைப்பு – HEART ATTACKஇதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Coronary) இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு… Continue reading கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்?
நாம் #அறியாத #தகவல்…
கண்டிப்பாக #படிங்க #அன்புள்ளங்களே…● நண்பர் வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது நண்பனின் 9 வயது மகன்.. ●மாமா நவகிரஹம் ஒன்பது உள்ளது. ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது. மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா?இது பாரபட்சம் இல்லையா? என கேட்டான். □அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி. பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறியவாரே,எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன். ●சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் குரு,… Continue reading நாம் #அறியாத #தகவல்…
திருமுருக கிருபானந்தவாரியார்
திருமுருக கிருபானந்தவாரியார்வரலாறு சுருக்கம்:சொல்லால், செயலதனால், சொற்பொழிவால், கீதத்தால்வல்ல அணிப்பூசை மாண்பதனால் – எல்லார்க்கும்இல்லாச் சிறப்பை இசை வாரியார் சாமிவல்லாண்மை மேலாகு மால் – தவத்திரு சுந்தரசுவாமிகள்1933 – ஆம் ஆண்டு. வயலூர் கோயிலின் அறங்காவலர், திருச்சியில் வசித்து வந்தார். அன்றிரவு அவரது கனவில் வயலூர் முருகன் தோன்றி, எட்டணா பெற்றுக் கொண்டாயே! அதனால், திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணி முடித்துவிடுவாயா? என்று கேட்டார். செட்டியாருக்கு எதுவும் புரியவில்லை. பயத்தால் உடல் வெலவெலத்தது. பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தார்.… Continue reading திருமுருக கிருபானந்தவாரியார்
ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.அதைக் கேட்ட டால்ஸ்டாய், உன் ”அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று” என்றார்.அதற்கு அந்தச் சிறுமி,… Continue reading ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்
அனுமனுக்கும் அர்ஜூனனுக்கும் நடந்த விபரீதமான போட்டி!..
ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு ‘ராம நாமம்’ ஜபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது. ‘ராமர் மிகச் சிறந்த வில்லாளி’ என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், ‘சேதுவுக்கும் இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?’ என்பதுதான் அந்தச் சந்தேகம்.தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது, என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று,… Continue reading அனுமனுக்கும் அர்ஜூனனுக்கும் நடந்த விபரீதமான போட்டி!..
“முடிவுகளில் கவனம் தேவை”
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள்… Continue reading “முடிவுகளில் கவனம் தேவை”
மனிதனின் மனநிறைவு
நாம் பத்தாவது மனிதனா…. அல்லது…. பத்தாது என்கிற மனிதனா*கடவுள் வந்தார்…!“என்ன வேண்டும் கேளுங்கள்,தருகிறேன்..!” என்றார்.அவரிடம் பத்து மனிதர்கள் தம்தேவைகளைக் கேட்டனர்.அதில் முதல் மனிதன் :“எனக்கு கணக்கிலடங்கா காசும்,பெரிய பிஸினஸும் வேண்டும்..!”இரண்டாம் மனிதன்:“நான் உலகில் சிறந்தோங்கிபெரிய பதவியை அடைய வேண்டும்..!”மூன்றாம் மனிதன் :“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்மிகப் பெரிய புகழ் வெளிச்சம்” வேண்டும்..!”“உலக அழகியைப் போல் பேரழகுவேண்டும்..!உலகமே அதில் மயங்க வேண்டும்..!”இப்படிஇன்னும் ஐந்து பேரும்தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்துவிட்டார்..!பத்தாவது மனிதன் கேட்டான்:“உலகத்தில்ஒரு… Continue reading மனிதனின் மனநிறைவு