அந்த வருடம் பத்தாவது தேர்வு எழுத வேண்டியவர்கள் எங்கள் தெரு மாணவ மாணவிகளுடன், விடுதி மாணவர்களும் சேர்ந்து பதினாறு பேரு நாங்கள். பலர் டியூசன் வகுப்பிற்காக விளந்திடசமூத்திரம் செல்ல,ரங்கநாத வாத்தியாரிடம் என்னை டியூசன் சேர்த்து விட்டார்கள் (இல்லை கோர்த்து விட்டார்கள்)எங்கள் வீட்டில். மெலிந்த தேகம்,அழுக்கு 8 முழ வேட்டி, முண்டா பனியன், சோடாபுட்டி மூக்கு கண்ணாடி, பூணூல் தோளில் இருந்து சறுக்கி கைகளில் விழவிழ எடுத்து போட்டுக் கொண்டே இருப்பார். பள்ளிக்கு வரும்போது பளிச்சென இருப்பார்,நெற்றியில் தீர்க்கமான… Continue reading ரங்கநாதன் சார் – கனித வாத்தியார்