Thirukkural -0010

Chapter [ Adhigaram ] – 1 – [  அதிகாரம் ] – 1

Kural- 0010

Kadavul Vaazhththu – The Praise of God  கடவுள் வாழ்த்து

அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

Kural in English Transliteration:

Piravip Perungatal Neendhuvar Neendhaar

Iraivan Atiseraa Thaar.

Couplet Explanation:

None can swim the great sea of births but those who are united to the feet of God.

மு.வ உரை:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

கலைஞர் விளக்கம்:

வாழ்க்கை   எனும்   பெருங்கடலை   நீந்திக்   கடக்க  முனைவோர்,
தலையானவனாக   இருப்பவனின்   அடி  தொடர்ந்து செல்லாவிடில் நீந்த
முடியாமல் தவிக்க நேரிடும்.

Rev. Dr. G.U.Pope Translations:

They swim the sea of births, the ‘Monarch’s’ foot who gain;
None other’s reach the shore of being’s mighty main.

Yogi Shuddhananda Translations:

The sea of births they alone swim
Who clench His feet and cleave to Him.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா

ரிறைவ னடிசேரா தார்:

பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்

                                    இறைவன் அடி சேராதார்.

தொடரமைப்பு:இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவி பெரு கடல் நீந்துவர், சேராதார் நீந்தார்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் = இறைவன் அடி என்னும் புணையைச் (சேர்ந்தார்), பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் = (அதனைச்) சேராதார், நீந்தமாட்டாராய் (அதனுள்) அழுந்துவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், ‘பிறவிப்பெருங்கடல்’ என்றார். ‘சேர்ந்தார்’ என்பது சொல்லெச்சம்.
உலகியல்பை நினையாது, இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவியறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன.

Leave a comment